Bihar Exit Poll: பீகாரில் பாஜக கூட்டணிக்கே ஆட்சி அரியணை.. காங்கிரஸ் - தேஜஸ்விக்கு பின்னடைவு.. டிவி ரிசர்ச் சர்வே
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு (Bihar Exit Poll Results 2025) முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில், பாஜக - நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தள கூட்டணி வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என டிவி ரிசர்ச் (DV Research) கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது. 137 முதல் 152 தொகுதிகளில் இந்த கூட்டணி வெற்றி பெறும் என்று கணித்துள்ளது.
காங்கிரஸ் - தேஜஸ்வி யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணி 83 - 98 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி 2 முதல் 4 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது.

பீகார் சட்டசபை தேர்தல்
பீகாரில் முதல்வராக நிதிஷ் குமார் இருந்து வருகிறார். பாஜக கூட்டணியில் உள்ள நிதிஷ்குமாரின் ஆட்சிக்காலம் வரும் 22 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. எனவே தேர்தல் ஆணையம் பீகார் சட்டசபைக்கான தேர்தல் தேதியினை அறிவித்தது. இதன்படி இரண்டு கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது.
மொத்தம் உள்ள 243 சட்டசபை தொகுதிகளில், முதல்கட்டமாக 121 தொகுதிகளுக்கு கடந்த 6 ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. மீதம் உள்ள 122 சட்டசபை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன.
பாஜக கூட்டணியே வெற்றி பெறும்
இதில், டிவி ரிசர்ச் (DV Research) வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவில் நிதிஷ் குமார் - பாஜக கூட்டணியே வெற்றி பெறும் என்றும் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் - தேஜஸ்வி யாதவ் கட்சி தோல்வியடையும் என கணித்துள்ளது. 137 முதல் 152 தொகுதிகளில் என்.டி.ஏ கூட்டணி வெற்றி பெறும்.
காங்கிரஸ் - தேஜஸ்வி யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணி 83 -98 தொகுதிகளில் வெற்றி பெறும். பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி 2 முதல் 4 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. மற்றவை 1 -8 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என கணித்துள்ளது.
DV Research - கருத்துக்கணிப்பு முடிவுகள்:
* என்.டி.ஏ கூட்டணி: 137 - 152 தொகுதிகள்
* இந்தியா கூட்டணி: 83 - 98 தொகுதிகள்
* ஜன் சுராஜ்: 2 - 4 தொகுதிகள்
* மற்றவை: 1 - 8 தொகுதிகள்
வெள்ளிக்கிழமை தேர்தல் முடிவு
பீகாரில் ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்கு 122 தொகுதிகளில் வெற்றி பெற்றால் போதும் என்பதால், எளிதில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்பதே இந்த கருத்துக்கணிப்பின் முடிவாக தெரிகிறது. இதனால் பீகாரில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி அமைய உள்ளது. எனினும் இது வெறும் கருத்துக்கணிப்பே என்பதால், வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும் ஓட்டு எண்ணிக்கையிலேயே உண்மையாக யார் வெற்றி பெறுவார் என்பது தெரியவரும். பொறுத்திருந்து பார்க்கலாம்..












Click it and Unblock the Notifications