முக்கியமான பணியில் இருக்கும் போலீசார் செல்போன் பயன்படுத்த அதிரடி தடை.. எங்க தெரியுமா?
பாட்னா: பீகார் மாநிலத்தில் முக்கியமான பணியில் ஈடுபட்டு இருக்கும் போலீசார் செல்போன் பயன்படுத்தக் கூடாது என்று அதிரடியாக உத்தரவிடப்பட்டுள்ளது.
பீகார் மாநிலத்தில் முக்கியமான பணியில் ஈடுபட்டு இருக்கும் போலீசார் செல்போனில் கேம் விளையாடுவது, வாட்ஸ்-அப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்துவதாக உயர் அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.

பீகார் அதிரடி
இந்த நிலையில் முக்கியமான பணியில் இருக்கும் போலீசார் செல்போன்கள், சமூக வலைத்தளங்களை பயன்படுத்த கூடாது என்று பீகார் அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அந்த மாநில போலீஸ் டிஜிபி எஸ்.கே.சிங்கால் மாநிலத்தின் அனைத்து மூத்த போலீஸ் உயர் அதிகாரிகளுக்கும் உத்தரவு கடிதம் அனுப்பி உள்ளார்.

தொடர் புகார்கள்
டிஜிபி எஸ்.கே.சிங்கால் அந்த உத்தரவில் கூறியிருப்பதாவது;- காவல்துறையினர் எந்த நேரமும் செல்போன்களில் மூழ்கி இருப்பது அல்லது சமூக ஊடகங்களில் பிஸியாக இருப்பது கடமையை பாதிக்கிறது. குறிப்பாக போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் இருக்கும் காவலர்கள், வி.ஐ.பி வருகையின்போது பணியில் இருக்கும் காவலர்கள் பலர் ஸ்மார்ட்போன்களில் விளையாடுவதாகவும் அல்லது ஒருவருக்கொருவர் சாட் செய்வதையும் முதற்கடமையாக கொண்டுள்ளதாக தொடர்ந்து புகார்கள் வந்துளளன.

செல்போன் பயன்படுத்தக் கூடாது
எனவே இனிமேல் போக்குவரத்து அல்லது வி.ஐ.பி / வி.வி.ஐ.பி வருகையின்போது பணியில் இருக்கும் காவலர்கள் செல்போன்கள் பயன்படுத்தக் கூடாது. மின்னணு சாதனங்களை பயன்படுத்துதல், சமூக ஊடகங்களை பயன்படுத்த கூடாது. இந்த உத்தரவை மீறியதாகக் கண்டறியப்பட்ட போலீஸ் அதிகாரிகள் அல்லது பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

மக்களுக்கு உதவி செய்ய வேண்டும்
காவல்துறையினர் கடமையில் இருக்கும்போது அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். எந்த நேரத்திலும் மக்களுக்கு உதவி செய்ய தயாராக இருக்க வேண்டும் என்று டிஜிபி எஸ்.கே.சிங்கால் உத்தரவிட்டுள்ளார். போக்குவரத்து பணி அல்லது வி.ஐ.பி வருகையின்போது கூட்டத்தை சமாளிக்க நிறுத்தப்பட்டுள்ள காவல்துறையினர் தங்கள் செல்போன்களை கடமையில் இருக்கும் மூத்த அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று 2019-ல் ராஜஸ்தான் அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications