மணிரத்னம் உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீதான தேசத்துரோக வழக்கை திரும்பப் பெற பீகார் போலீஸ் முடிவு
பாட்னா: இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் மீதான தேசத்துரோக வழக்கை திரும்பப்பெற பீகார் காவல்துறை முடிவு செய்துள்ளது.
நாட்டில் நடக்கும் கும்பல் வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து இயக்குநர் மணிரத்னம், நடிகை ரேவதி, ராமச்சந்திர குஹா, அபர்ணா சென், திரைப்பட தயாரிப்பாளர் ஷியாம் பெனகல், பாடகர் சுபா முத்கல், வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குகா, பிரபல வங்காள திரைப்பட நடிகர் சவுமித்ரா சாட்டர்ஜி, சமூக சேவகர் பினாயக் சென், சமூகவியலாளர் ஆஷிஷ் நந்தி, நடிகர் அனுராக் காஷ்யப் உள்பட 49 பிரபலங்கள் பிரதமர் மோடிக்கு கடந்த ஜுலை மாதம் கடிதம் எழுதினர்.
சினிமா, கலை, இலக்கியம், அறிவியல், மருத்துவம் உட்பட பல்வேறு துறையைச் சேர்ந்த இந்தியாவின் முக்கிய பிரபலங்கள் எழுதிய கும்பல் வன்முறைக்கு எதிரான கடிதம் பாஜகவுக்கு எதிராக அரசியல் அரங்கில் பெரும் புயலை கிளப்பியது.

நீதிமன்றம் அதிரடி உத்தரவு
இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம், பீகாரைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதிர்குமார் ஓஜா என்பவர், பிரதமருக்கு கடிதம் எழுதிய பிரபலங்கள், நாட்டினுடைய நற்பெயரை கெடுப்பதாகவும் பிரிவினைவாதத்தை ஊக்குவிப்பதாகவும் கூறி, வழக்கு தொடர்ந்தார். இதைத்தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி பீகார் நீதிமன்றம் இந்த மனுவை ஏற்றுக்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு பீகார் மாநில காவல்துறைக்கு உத்தரவிட்டது.

மத உணர்வை புண்படுத்துதல்
இதையடுத்து இயக்குனர் மணிரத்னம், நடிகை ரேவதி உள்பட 49 பிரபலங்கள் மீது தேசத்துரோகம், பொதுமக்களுக்கு தொந்தரவு விளைவித்தல், மத உணர்வுகளை புண்படுத்துதல், அமைதியை குலைக்கும் வகையில் பேசுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் பீகார் போலீசார் வழக்கு பதிவு செய்தார்கள்

பிரபலங்கள் கண்டனம்
இந்த வழக்குப் பதிவு இந்தியத் திரையுலகப் பிரபலங்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாகத் தமிழ் திரையுலகப் பிரபலங்கள்,அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

வழக்கறிஞர் மீது வழக்கு
இந்நிலையில் இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் மீதான தேசத்துரோக வழக்கை திரும்பப்பெற பீகார் காவல்துறை முடிவு செய்துள்ளது. 49 பேர் மீது புகார் அளித்த நபர் தவறான தகவல்கள் அளித்ததை பீகார் காவல்துறை கண்டுபிடித்ததையடுத்து இந்த முடிவுக்கு வந்துள்ளது. இதனிடையே புகார் அளித்த வழக்கறிஞர் சுதிர் குமார் ஓஜா மீது காவல்துறை வழக்குத் தொடரும் என்று பீகார் மூத்த போலீஸ் அதிகாரி மனோஜ்குமார் சின்ஹா தெரிவித்துள்ளார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications