கணவர் இல்லாதபோது! இளைஞரை அடிக்கடி வீட்டிற்கு அழைத்த சுசிலா! கடுப்பான ஊர் மக்கள் முன் நடந்த "சம்பவம்"
பாட்னா: கணவர் வெளியூரில் இருந்த சமயத்தில், இளைஞருடன் அடிக்கடி நெருக்கமாக இருந்து வந்த பெண்ணுக்குக் கிராம மக்கள் வினோத தண்டனை கொடுத்துள்ளனர்.
பீகார் மாநிலம் மேற்கு சம்பரன் மாவட்டத்தின் ஷிக்கர்பூர் பகுதிக்கு அருகே உள்ள கிராமம் சுகவுலி. இந்த கிராமத்தில் சுசிலா தேவி என்பவர் வசித்து வருகிறார்,
இவருக்கு ஏற்கனவே திருமணமாகி, மூன்று குழந்தைகள் உள்ளனர். இவரது கணவர் மும்பையில் டாக்ஸி டிரைவார வேலை பார்த்து வருவதாகக் கூறப்படுகிறது.

பீகார்
டாக்ஸி டிரைவராக வேலை பார்த்து வருவதால், மும்பையிலேயே அவர் தங்கி உள்ளார். மேலும், அவர் அடிக்கடி சொந்த ஊருக்குப் போவதில்லை. பண்டிகை போல விஷேச நாட்களுக்கு மட்டுமே இவர் சொந்த ஊருக்குச் சென்று மனைவி மற்றும் குழந்தைகளைச் சந்தித்து வருவார். தினசரி சுசிலா தேவி மற்றும் குழந்தைகளிடம் போன் மூலம் மட்டுமே அவர் பேசி வந்துள்ளார்.

இளைஞர்
சுசிலா தேவி தனது குழந்தைகள் உடன் கிராமத்திலேயே இருந்துள்ளார். கணவர் இல்லாமல் தனிமையில் வாடிய சுசிலாவுக்கு வினோத் ராம் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அண்டை கிராமமான லவுகாரியாவில் வசித்து வரும் இந்த வினோத் ராம், சொந்தமான செல்போன் கடை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. ஆரம்பத்தில் சாதாரணமாகப் பழகி வந்த இருவரும், ஒரு கட்டத்திற்கு மேல் நெருங்கிப் பழகத் தொடங்கி உள்ளனர்.

தனிமையில் சந்திப்பு
கணவர் வீட்டில் இல்லாததால் வினோத்தை சுசிலா தேவி வீட்டிற்கு வரவழைத்துள்ளார். இருவரும் அடிக்கடி வீட்டில் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர். இந்தச் சம்பவங்கள் கிராமத்தில் உள்ளவர்களுக்கும் ஒரே அதேபோலத் தான் கடந்த சில நாட்களுக்கு முன்பும் வினோத் ராமை சுசிலா தேவி வீட்டிற்கு அழைத்துள்ளார். இருவரும் வழக்கம் போலத் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர்,

திரண்ட ஊர் மக்கள்
இரவு நேரம் என்பதால் வினோத் ராம் வந்ததை யாரும் பார்த்து இருக்க மாட்டார்கள் என நினைத்துள்ளார் சுசிலா தேவி. ஆனால் சுசிலாவின் கணவரைத் தவிர மற்றொருவர் அவரது வீட்டிற்குச் சென்றதைப் பார்த்ததும் ஆத்திரமடைந்த ஊர் மக்கள், அவரது வீட்டின் முன் கூடி உள்ளனர். வெகு நேரமாகியும் யாரும் வெளியே வராததால், கதவைத் தட்டியுள்ளனர். இதைக் கேட்டதும் உள்ள இருந்து ஜோடி அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றுவிட்டது.

கம்பம்
எவ்வளவு சமாளிக்க முயன்றும், ஊர் மக்கள் நகர்ந்து செல்லாததால், வேறு வழியின்றி கதவை திறந்துள்ளார் சுசிலா! மொத்த ஊரும் வெளியே தான் நின்று கொண்டு இருந்தது. இருவரையும் தரதரவென வெளியே இழுத்து வந்த ஊர் மக்கள் இருவரையும் மின் கம்பத்தில் கட்டியுள்ளனர். விடியும் வரை இருவரையும் அந்த கம்பத்திலேயே கட்டிப்போட்டுள்ளனர். மேலும், வினோத்தின் குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவம்
அங்கு வந்ததும் வினோத்தைப் பார்த்து ஆவேசமடைந்த அவரது குடும்பத்தினர், அந்த பெண்யை வினோத்திற்குத் திருமணம் செய்து வைக்கும்படி கேட்டுக் கொண்டனர். இதற்குக் கிராம மக்களும் சம்மதித்த நிலையில், சுசீலாவுக்கும் வினோத்துக்கும் திருமணம் நடத்தி வைத்தனர். எந்த மின் கம்பத்திற்குக் கீழே இருவரும் கட்டப்பட்டு இருந்தார்களோ, அதே மின் கம்பத்தின் அடியில் இருவருக்கும் திருமணம் நடந்தது. தாலி கட்டிய உடனேயே, கிராம மக்களின் வலியுறுத்தலால் அவர்கள் கிராமத்தை விட்டு வெளியேறினர்.












Click it and Unblock the Notifications