பீகாரில் 75 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியானது ஆர்ஜேடி- பாஜகவுக்கு 74 தொகுதிகள்!
பாட்னா: பீகாரில் 75 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருக்கிறது ஆர்ஜேடி. இதற்கு அடுத்ததாக பாஜக 74 இடங்களை கைப்பற்றி 2-வது இடத்தில் உள்ளது.
Recommended Video
வட இந்திய மாநிலங்களில் பீகாரில்தான் பாஜகவால் தனிப்பெரும் கட்சியாக விஸ்வரூபம் எடுக்க முடியாமல் இருந்து வந்தது. பீகாரில் ஆர்ஜேடி, ஜேடியூ என்ற இரு மாநில கட்சிகளில் ஒன்றுதான் தனிப்பெரும் கட்சியாக இருந்து வந்தன.
இந்த தேர்தலில் கூட்டணி கட்சியாக இருந்தாலும் ஜேடியூவைவிட அதிக இடங்களில் வெல்ல வேண்டும் என்கிற முனைப்பை காட்டியது பாஜக. இதற்காகவே இன்னொரு கூட்டணி கட்சியான லோக் ஜனசக்தியை, ஜேடியூவுக்கு எதிராக போட்டியிடவும் வைத்தது பாஜக என்கிற குற்றச்சாட்டும் வலுவான முன்வைக்கப்பட்டது.
சிராக் பாஸ்வானை கன்ட்ரோல் செய்யாமல் விட்டதால் வந்தவினை.. கொதிக்கும் ஜேடியூ
தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளின் படி ஆர்ஜேடி கட்சி மொத்தம் 75 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருக்கிறது. பாஜகவோ 74 இடங்களில் மட்டுமே வென்று 2-வது இடத்தில் உள்ளது.
ஜேடியூ மொத்தம் 43 இடங்களில் 3-வது இடத்தையும் காங்கிரஸ் கட்சி 19 இடங்களுடன் 4-வதாகவும் உள்ளது. பீகாரின் 5-வது பெரிய கட்சியாக 12 இடங்களைக் கைப்பற்றியிருக்கிறது சிபிஐஎம்எல்.