தமிழகத்தை போலவே.. பீகாரிலும் சொந்த கூட்டணியை கீழே இழுத்துவிட்ட காங்கிரஸ்.. பாஜக கூட்டணி முன்னிலை
பாட்னா: தமிழகத்தில் கடந்த சட்டசபைத் தேர்தலின்போது திமுக கூட்டணியில் காங்கிரஸ் எப்படி ஒரு கூடுதல் பாரமாக மாறி, திமுக ஆட்சியை பிடிக்க முடியாமல் செய்ததோ அதே போல இப்போது பீகாரிலும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணிக்கு காங்கிரஸ் பாரமாக மாறியுள்ளது. இது பாஜக கூட்டணிக்கு சாதகமாக உள்ளது.
Recommended Video
மாலை 4 மணி நிலவரப்படி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைமையிலான கூட்டணி 110 இடங்களிலும், தேசிய ஜனநாயக கூட்டணி 123 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன.
243 தொகுதிகள் கொண்ட சட்டசபை தேர்தலில், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி 144 தொகுதிகளில் போட்டியிட்டது. அதில் சுமார் 72 இடங்களில் முன்னிலை வகித்தது. காங்கிரஸ் கட்சி 70 தொகுதிகளில் போட்டியிட்டது. 21 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. பாஜக 73 தொகுதிகளிலும், ஜேடியூ 43 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன.

நான்கில் ஒரு தொகுதி
அதாவது போட்டியிட்ட பாதிக்கும் மேற்பட்ட தொகுதிகளில் ராஷ்ட்ரீய ஜனதாதளம் முன்னிலை வகிக்கும் நிலையில், போட்டியிட்டதில் சுமார் நான்கில் ஒரு தொகுதியில் தான் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. இதனால்தான் பாஜக கூட்டணி முன்னிலை பெறத் தொடங்கியுள்ளது. ராஷ்ட்ரிய ஜனதாதள கூட்டணியில் மிகப்பெரிய பாரமாக காங்கிரஸ் மாறி அந்த கூட்டணியை முன்னேறவிடாமல் கீழே இழுத்துக் கொண்டிருக்கிறது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ்
காங்கிரஸ் தனது கூட்டணிக்கு பாரமாக மாறுவது தமிழகத்தில் இருந்துதான் ஆரம்பித்தது என்று சொல்லலாம். 2016 ஆம் ஆண்டு, திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருந்தது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் திமுக 176 தொகுதிகளில் மட்டும் போட்டியிட்டது. கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு 41 இடங்களை வாரி வழங்கியது. இந்த தேர்தலில் திமுகவுக்கு மட்டும் 31.56 சதவீதம் வாக்குகள் கிடைத்தன. ஆனால் காங்கிரஸின் வாக்கு சதவீதம் வெறும் 6.47 மட்டுமே.

தவற விட்ட திமுக
திமுக தனித்து 89 தொகுதிகளை வென்றது. காங்கிரஸ் கட்சி வெறும் 8 தொகுதிகளை மட்டுமே வென்றது. காங்கிரஸ் போட்டியிட பல தொகுதிகளில் அதிமுக வென்றது. அதிமுக 227 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டது. எனவே 'காங்கிரஸின் புண்ணியத்தால்' அதிமுக ஆட்சியை மறுபடியும் பிடித்தது. அதிமுக கூட்டணி 134 இடங்களையும், திமுக கூட்டணி 98 இடங்களையும் பிடித்தது.

காங்கிரசை புறக்கணித்த மக்கள்
இப்போது பீகாரிலும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் தேஜஸ்வி அதிக வாக்குகளை மக்கள் வழங்கியுள்ளார்கள் தவிர காங்கிரசை புறக்கணித்துள்ளனர் என்பது இந்த ட்ரெண்ட் மூலம் தெரிய வருகிறது. இதனால் இக் கூட்டணி ஆட்சியை பிடிக்க முடியாமல் போனாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா












Click it and Unblock the Notifications