பீகார் தேர்தல்.. லாலு கட்சி கூட்டணியில் குழப்பம்! தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாததால் சலசலப்பு!
பாட்னா: பீகாரில் அடுத்த மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், என்டிஏ மற்றும் மகாபந்தன் கூட்டணியில் உள்ள கட்சிகள் தொகுதி பங்கீட்டில் மும்முரம் காட்டி வருகின்றன. ஆனால், மகாபந்தன் கூட்டணியில் இடதுசாரி கட்சிகள் தங்களுக்கு போதுமான தொகுதிகளை ஒதுக்கவில்லை என்று அதிருப்தி தெரிவித்திருக்கின்றன.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) [CPI(ML)] கடந்த தேர்தலில், மகாபந்தன் கூட்டணியில் 19 தொகுதிகளில் போட்டியிட்டு 12 தொகுதிகளில் வெற்றி பெற்றது. எனவே இந்த முறையும் கட்சிக்கு 19 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதனை கட்சி ஏற்க மறுத்துள்ளது. கடந்த தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸை விட சிறப்பான வெற்றியை பதிவு செய்திருப்பதாகவும், எனவே இந்தமுறை குறைந்தது 40 தொகுதிகளை எதிர்பார்ப்பதாகவும் கட்சி தெரிவித்திருக்கிறது.

கடந்த தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தளம் 144 தொகுதிகளில் போட்டியிட்டு 75 இடங்களை வென்றது(52.08%). காங்கிரஸ் 70 தொகுதிகளில் போட்டியிட்டு 19 இடங்களை மட்டுமே பெற்றது (27.14%). CPI(ML) 19 தொகுதிகளில் போட்டியிட்டு 12 தொகுதிகளில் வெற்றி பெற்றது (63.16%). வென்ற தொகுதிகள் குறைவாக இருப்பினும் வெற்றி விகிதம் அதிகமாக இருப்பதால் CPI(ML) கூடுதல் தொகுதிகளை கேட்கிறது. இது குறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில்,
"கட்சியின் சுயமரியாதை சமரசம் செய்யப்படாது. மகாபந்தனின் வெற்றியை உறுதிப்படுத்த எங்களுக்கு நியாயமான இடப்பகிர்வு அவசியம். RJD இதை புரிந்துகொள்ள மறுப்பது ஆச்சரியமளிக்கிறது. RJD-யின் முடிவைப் பொறுத்து மகாபந்தனில் தொடர்வதா இல்லையா என்று நாங்கள் முடிவு செய்வோம்" என்று கூறியிருக்கிறார். 40 தொகுதிகள் என்பது அதிகபட்சமாகும். எனவே குறைந்தது 30 தொகுதிகளாவது ஒதுக்கப்பட வேண்டும் என CPI(ML) எதிர்பார்க்கிறது.
கூட்டணியில் CPI(ML)க்கு அதிக இடங்கள் ஒதுக்கப்படாமல் இருக்க காரணம், விகாஷீல் இன்சான் கட்சிக்கும் போதுமான தொகுதிகளை வழங்க வேண்டிய அவசியம் RJD-க்கு உள்ளது. விகாஷீல் இன்சான் கட்சிக்கு 12 இடங்கள் வழங்கப்பட்டன. இது 2020-ல் பாஜக-வுடன் கூட்டணியில் இருந்தபோது போட்டியிட்டதைவிட ஒரு இடம் அதிகம். இக்கட்சியின் தேசிய தலைவர் முகேஷ் சஹானி அதிக இடங்களைப் பெற முயற்சித்தார். செவ்வாய்க்கிழமை பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய சஹானி, இடப்பகிர்வு முடிவாகிவிட்டதாகவும், ஒன்று அல்லது இரண்டு நாட்களில் அறிவிக்கப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
இதற்கிடையில், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள்ளும் தீவிர பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. பாஜகவின் பீகார் தேர்தல் பொறுப்பாளர் தர்மேந்திர பிரதான், மற்ற கட்சித் தலைவர்களுடன், டெல்லியில் உள்ள லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) தலைவர் சிராக் பாஸ்வானின் இல்லத்தில் சந்தித்துப் பேசினார். பிரதானுடன் பாஜகவின் பீகார் பொறுப்பாளர் வினோத் தாவ்டே மற்றும் மாநில அமைச்சர் மங்கள் பாண்டே ஆகியோர் உடனிருந்தனர்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications