விடுங்கடா.. எனக்கு எய்ட்ஸ் இருக்கு.. கதறிய பெண்.. விடாமல் சீரழித்த 2 பேர்.. ஓடும் ரயிலில் வெறித்தனம்
ஓடும் ரயிலில் எச்ஐவி பாதித்த பெண்ணை 2 பேர் சீரழித்தனர்
Recommended Video
பாட்னா: எச்ஐவி இருக்கிறது என்று இளம்பெண் கதறியும், 2 இளைஞர்கள் ஓடும் ரயிலிலேயே பலாத்காரம் செய்துள்ளனர்.. இப்போது போலீசார் அவர்களை கைது செய்துள்ளனர்.
பீகார் மாநிலத்தில் உள்ள இடம் கைமூர்... இங்கு வசித்த வரும் 22 வயது பெண் எச்ஐவி நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.. இதற்கான சிகிச்சையிலும் அவர் உள்ளார்.

இந்நிலையில் சம்பவத்தன்று, பாட்னாவில் வழக்கமான செக்-அப்புக்கு சென்றிருந்தார்.. ஆனால் திரும்பி வீட்டிற்கு வருவதற்குள் இரவு நேரம் ஆகிவிட்டது.
நள்ளிரவு நேரம் பபுரோடு ரயில்வே ஸ்டேஷன் சென்றார்.. 11.50 மணியளவில் பாட்னாவுக்கு செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறி உட்கார்ந்து கொண்டார்.. அந்த கம்பார்ட்மென்ட்டில் இவரை தவிர வேறு பெண்கள் இல்லை.. இதை அறிந்து கொண்ட 2 இளைஞர்கள், அந்த பெண் இருக்கும் கம்பார்ட்மென்ட்டுக்குள் நுழைந்தனர்..
ஓடும் ரயிலிலேயே மாறி மாறி பலாத்காரம் செய்தனர். தன்னை விட்டுவிடுமாறும், எய்ட்ஸ் இருப்பதாகவும் அந்த பெண் அலறியும், அதை அவர்கள் காதிலேயே போட்டுக் கொள்ளாமல் சீரழித்துள்ளனர். இந்த சமயத்தில் நைட் நேரத்தில் ரோந்து பணியில் இருந்த ரயில்வே போலீசார் இதை பார்த்துவிட்டனர்.
உடனடியாக அந்த கம்பார்ட்மென்ட்டில் ஏறினர்.. ஆனால் அவரை பார்த்ததும் 2 பேரில் ஒருவர் தப்பி ஓடினார்.. பின்னாடியே விரட்டி சென்ற போலீசார் அவரை மடக்கி பிடித்தனர்.. அப்போது, நண்பருடன் சேர்ந்து இளம்பெண்ணை பலாத்காரம் செய்ததை ஒப்புக் கொண்டார். இதையடுத்து 2 பேரையுமே போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் விசாரணை நடத்தியதில், இருவரும் கைமூர் மாவட்டம், சாய்தா என்ற பகுதியை சேர்ந்தவர்க என்று தெரியவந்தது.. பிரேந்திரசிங் 26, தீபக் சிங், 28 என்பது அவர்களின் பெயர் என்றும் தெரியவந்தது. ஓடும் ரயிலில் எச்ஐவி பாதிக்கப்பட்ட பெண்ணை பலாத்காரம் செய்த சம்பவம் பீகாரை அதிர வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications