ஹையா ஜாலி.. கொரோனா வைரஸ் எங்களை விட்டு போகுது.. கிஷோரை பங்கமாக கலாய்த்த ஜேடியு!
பாட்னா: கொரோனா வைரஸ் எங்களை விட்டு செல்ல போகிறது. மகிழ்ச்சியாக இருக்கிறது என பிரசாந்த் கிஷோர் குறித்து ஜேடியு கட்சியின் மூத்த தலைவர் அஜய் அலோக் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் பிரசாந்த் கிஷோரிடம் நம்பகத்தன்மை இல்லை. பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் நிதிஷ்குமார் ஆகியோரின் நம்பிக்கையை அவர் பெறவில்லை. பிரசாந்த் கிஷோர் ஆம் ஆத்மிக்கு பணியாற்றுகிறார். ராகுல் காந்தியுடன் பேசுகிறார். மம்தா பானர்ஜியை சந்திக்கிறார்.

நாடாளுமன்றத்தில்
இப்படி பல கட்சிகளுடன் சகவாசம் இருந்தால் யார் அவரை நம்புவார்கள். அவர் எந்த கட்சிக்கு செல்ல விரும்புகிறாரோ அங்கு செல்லட்டும். அதுகுறித்து எங்களுக்கு கவலையில்லை. கொரோனா வைரஸ் எங்களை விட்டு செல்வதால் நாங்கள் சந்தோஷமடைகிறோம் என்றார். குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் ஐக்கிய ஜனதா தளம் வாக்களித்தது.

சலசலப்பு
ஆனால் அக்கட்சியின் துணைத் தலைவரும் அரசியல் ஆலோசகருமான பிரசாந்த் கிஷோர் கட்சியின் கருத்துக்கு மாறாக கருத்து தெரிவித்துள்ளார். இந்த நிலையில் பிரசாந்த் இது போல் பேசி வருவது பாஜக- ஐக்கிய ஜனதா தளம் கட்சி இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவரை மூத்த தலைவர்கள் எதிர்க்க தொடங்கிவிட்டனர்.

நாட்கள்
இதுகுறித்து பாட்னாவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் ஒருவர் கடிதம் எழுதினார். அதற்கு நான் பதில் அளித்தேன். ஒருவர் ட்வீட் செய்தார். அவரும் ட்வீட் செய்யட்டும். யார் எவ்வளவு நாட்கள் தங்க விரும்புகிறார்களோ அத்தனை நாட்கள் தங்கிக் கொள்ளட்டும். எங்கள் கட்சி வித்தியாசமான கட்சி.

வேறு கட்சி
அவர் ஏற்கெனவே பல்வேறு கட்சிகளுக்கு அரசியல் ஆலோசகராக பணியாற்றியுள்ளார். ஆனால் நான் ஒன்றை மட்டும் தெளிவாக கூறி கொள்கிறேன். அவர் கட்சியில் இருப்பது என்றால் இருக்கட்டும். ஆனால் எங்கள் கட்சியின் அடிப்படை கட்டமைப்புகளை அவர் ஏற்றுக் கொள்ள வேண்டும். வேறு கட்சிக்கு செல்ல விரும்பினால் அவர் செல்லட்டும். நான் தடுக்கவில்லை.

தெரியவில்லை
அவர் கட்சியில் சேருவதற்கு யார் காரணம் தெரியுமா. அமித்ஷாதான். அவர்தான் கிஷோரை ஐக்கிய ஜனதா தளத்தில் சேர்த்து கொள்ளுமாறு தெரிவித்தார். அதை கொஞ்சமாவது அவர் நினைவில் கொள்ள வேண்டும். ஒரு வேளை அவர் கட்சியை விட்டு செல்ல விரும்புகிறாரோ என்னவோ தெரியவில்லை என நிதிஷ்குமார் தெரிவித்தார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications