மின்னல் தாக்கி.. ஒரே நாளில் 26 பேர் பலி.. ஒரே வாரத்தில் 133 பேர் பலி.. பீகாரில் என்ன நடக்கிறது?
பாட்னா: மின்னல் தாக்கி இன்று மட்டும் பீகாரில் 26 பேர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமீப நாட்களாக வட இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் மக்கள் மின்னல் தாக்கி பலியாகும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. அதிலும் பீகார், உத்தரகாண்ட் மாநிலங்களில் அடிக்கடி மக்கள் மின்னல் தாக்கி பலியாகிறார்கள்.

அதன்படி கடந்த ஜூன் 26ம் தேதி பீகாரில் மின்னல் தாக்கி 96 பேர் ஒரே நாளில் பலியானார்கள். அதன்பின் கடந்த செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 11 பேர் மின்னல் தாக்கி பலியானார்கள். இந்த நிலையில் மின்னல் தாக்கி இன்று மட்டும் பீகாரில் 26 பேர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதன்படி பீகாரில் இருக்கும் பாட்னாவில் மட்டும் 6 பேர் இதனால் பலியாகி உள்ளனர். அதேபோல் கிழக்கு சாம்பிரான் பகுதியில் 4 பேர் பலியாகி உள்ளனர். சமஸ்திபூர் பகுதியில் 7 பேர் பலியாகி உள்ளனர். மூன்று பேர் கதிஹார் பகுதியில் பலியாகி உள்ளனர். இரண்டு பேர் சிவகார் மற்றும் மேத்தாப்பூர் பகுதியில் பலியாகி உள்ளனர்.
பீகாரில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கடுமையான இடி, மின்னல், மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் கூறியுள்ளது. ஏற்கனவே அங்கு மின்னல் காரணமாக 133 பேர் பலியாகி உள்ளதால் பெரிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது . பீகாரில் கொரோனா காரணமாக 78 பேர் மட்டுமே பலியாகி உள்ள நிலையில் மின்னல் காரணமாக இத்தனை பேர் பலியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம்












Click it and Unblock the Notifications