ராவணனை போல அகங்காரம்.. கிம் ஜாங் உன் போல சர்வாதிகாரம் கொண்டவர் மம்தா.. கிரிராஜ் சிங் தாக்கு
பாட்னா: நாடு முழுவதும் பிரபல முன்னணி ஊடகங்கள் வெளியிட்ட எக்ஸிட் போல் முடிவுகள், எதிர்கட்சியினரை கலங்கடித்துள்ளதாக மத்திய அமைசச்ர் கிரிராஜ் சிங் கூறியுள்ளார்.
7 கட்டங்களாக நடந்த மக்களவை தேர்தல் கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைந்தது. அதன் பின்னர் வெளியிடப்பட்ட எக்ஸிட் போல் முடிவுகளை வைத்து அரசியல் கட்சியினர் வாக்குவாதம் செய்து கொள்வது இன்னும் குறைந்தபாடில்லை.

நாடே எதிர்பார்த்து காத்திருக்கும் மக்களவை தேர்தல் முடிவுகள் நாளை வெளியிடப்பட உள்ளன. இந்நிலையில் எக்ஸிட் போல் முடிவுகளின் படி, பாரதிய ஜனதா தான் பெரும்பான்மை பெற்று ஆட்சியை தக்க வைக்கும் என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கூறியுள்ளார்.
இது தொடர்பாக தனியார் செய்தி சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள அவர், லோக்சபா தேர்தலுக்கு பின் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகள் எதிர்க்கட்சியினரை கதிகலங்க செய்துள்ளதாக குறிப்பிட்டார்.

பாரதிய ஜனதாவே வெற்றி பெறும் என உறுதியாக தெரிந்து விட்டதால், அனைத்து எதிர்கட்சிகளும் தேவையின்றி இப்போதிலிருந்தே வாக்குப்பதிவு இயந்திரங்களை குறை கூற துவங்கிவிட்டதாக சாடியுள்ளார்.
மேற்குவங்க முதல்வரின் செயல்பாடுகள் குறித்து கருத்து தெரிவித்த கிரிராஜ் சிங், ராவணனை போல மம்தா பானர்ஜி மிகுந்த அகங்காரத்துடன் செயல்படுவதாக விமர்சித்தார். கிம் ஜாங் உன் வடகொரிய நாட்டை சர்வாதிகாரத்துடன் ஆட்சி செய்வதை போலவே, மேற்கு வங்க மாநிலத்தை மம்தா ஆட்சி செய்து வருவதாக குறிப்பிட்டார் கிரிராஜ் சிங்.
மேலும் பேசிய அவர், ஏழை எளியவர்களை தேடி சென்று சந்திக்கும் ஒரே அரசியல் தலைவர் மோடி மட்டுமே. எனவே மோடி மட்டுமே இந்த தேர்தலில் போட்டியிடுகிறார் என்றே கருத வேண்டும். மேலும் வரும் ஆட்சியில் ஆளுங்கட்சியும் நாங்கள்தான், எதிர்க்கட்சியும் நாங்கள் தான் என்றார்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications