உறவாடி குடியை கெடுத்தார்கள்; பழிக்குப் பழி; ஒரு குடும்பத்தையே தீர்த்துக்கட்டிய மாவோயிஸ்ட்கள்!
பாட்னா: பீகார் மாநிலம் கயாவில் உறவாடி குடியை கெடுத்ததாக கூறி ஒரு குடும்பத்தையே மொத்தமாக மாவோயிஸ்ட்கள் தீர்த்துக்கட்டிய நிகழ்வு நடந்துள்ளது.
துமாரியாவில் உள்ள மோன்பார் கிராமத்தில் நடந்துள்ள இந்த நிகழ்வை கங்காரு நீதிமன்றம் மூலம் தண்டனை வழங்கியதாக மாவோயிஸ்ட்கள் தெரிவித்துள்ளனர்.
கங்காரு நீதிமன்றம் என்பதை சட்ட அங்கீகாரம் இல்லாத முறையில் நடத்தப்படும் விசாரணை அல்லது கட்டப்பஞ்சாயத்து என எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்.

பீகார் மாநிலம்
பீகார் மாநிலம் கயாவில் உள்ள துமாரியா அருகே மோன்பார் என்ற கிராமம் உள்ளது. அங்குள்ள சர்ஜு போக்தாவின் வீட்டை வெடிவைத்து தகர்த்த மாவோயிஸ்ட்கள், சர்ஜு போக்தாவின் மகன்களான சத்யேந்திர சிங் போக்தா, மகேந்திர சிங் போக்தா மற்றும் அவர்கள் இருவரது மனைவிகள் என 4 பேரை வீட்டு முற்றத்தில் வைத்து தூக்கிலிட்டுள்ளனர் மாவோயிஸ்ட்கள். மேலும், தங்களுக்கு துரோகம் செய்பவர்கள் இதுபோன்ற கடும் தண்டனையிலிருந்து தப்பமுடியாது எனவும் எச்சரித்து அங்கு போஸ்டர் ஒட்டிச் சென்றுள்ளனர் மாவோயிஸ்ட்கள்.

4 பேர் கொலை
ஒரு குடும்பத்தையே அதுவும் இரண்டு பெண்களை ஈவு இரக்கமின்றி மாவோயிஸ்ட்கள் கொலை செய்ய வேண்டிய காரணம் என்ன என ஆராய்ந்த போது, அம்ரேஷ் குமார், சீதாகுமார், சிப் பூஜன் குமார், உதய்குமார் ஆகிய 4 மாவோயிஸ்ட்கள் கடந்தாண்டு சாப்பாட்டில் விஷம் வைத்து கொல்லப்பட்ட நிகழ்வில் போக்தா குடும்பத்தினருக்கு தொடர்புடையாக மாவோயிஸ்ட்கள் கருதியதே காரணம் எனக் கூறப்பட்டுள்ளது.

பழிக்குப் பழி
மேற்கண்ட 4 மாவோயிஸ்ட்களையும் தாங்கள் தான் என்கவுண்டர் செய்ததாக போலீஸ் கூறி வரும் நிலையில், அதனை திடமாக மறுக்கும் உயிரிழந்த மாவோயிஸ்ட்களின் சக தோழர்கள் போக்தா குடும்பத்தின் கைங்கர்யத்தால் தான் விஷம் வைத்து கொல்லப்பட்டதாக நம்பினர். இதன் காரணமாக ஓராண்டு கழித்து பழிக்குப் பழியாக மோன்பார் கிராமத்திற்குள் புகுந்து போக்தா குடும்பத்தை மாவோயிஸ்ட்கள் மொத்தமாக வேட்டையாடியுள்ளனர்.

கங்காரு நீதிமன்றம்
இந்த நிகழ்வு பீகார் மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே இந்த சம்பவத்தில் தொடர்புடைய மாவோயிஸ்ட்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் பணிகள் தொடங்கியுள்ளன. தாக்குதல்கள் ஆங்காங்கு தொடர்ந்தாலும் கூட கங்காரு நீதிமன்றம் மூலம் விசாரணை நடத்தி மாவோயிஸ்ட்கள் தண்டனை வழங்கியது பீகாரில் இதுவே முதல்முறையாகும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications