Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பீகார் முதல்வர் பதவி வேண்டாம்.. ராஜ்யசபா எம்பியாகும் நிதிஷ் குமார்.. இன்று மனு.. எல்லாம் மகனுக்காக!

Subscribe to Oneindia Tamil

பாட்னா: பீகாரில் ஐக்கிய ஜனதாதளம் - பாஜகவின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இதில் ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் முதல்வராக உள்ளார். இந்நிலையில் தான் நிதிஷ் குமார் இன்று ராஜ்யசபா எம்பி வேட்பாளராக வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.. இதன்மூலம் அவர் தனது முதல்வர் பதவியை பாஜகவிடம் விட்டு கொடுத்துவிட்டு ராஜ்யசபா எம்பியாக தொடர உள்ள நிலையில் அதன் பின்னணி குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.

nitish-kumar-expected-to-file-nomination-today-and-bihar-likely-to-get-new-bjp-cm

பீகாரில் பாஜக - ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் முதல்வராக உள்ளார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த தேர்தலில் பாஜக 89 தொகுதகிளிலும், ஐக்கிய ஜனதாதளம் கட்சி 85 இடங்களிலும் வெற்றி பெற்றது. எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போனாலும் கூட தற்போது பாஜக கூட்டணிக்கு மொத்தம் 202 எம்எல்ஏக்கள் உள்ளனர்.

ராஜ்யசபா தேர்தல்

இந்நிலையில் தான் பீகார் முதல்வர் பதவியை கைவிட்டுவிட்டு நிதிஷ் குமார் ராஜ்யசபா எம்பியாவதாக முக்கிய தகவல்கள் வெளியானது. பீகாரில் 5 ராஜ்யசபா இடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் இன்றுடன் முடிவுக்கு வர உள்ளது. பாஜக மற்றும் ஐக்கிய ஜனதாதளம் கட்சிகளில் இருந்து தலா 2 பேர் ராஜ்யசபா எம்பியாக முடியும்.

இதில் பாஜக சார்பில் தேசிய தலைவர் நிதின் நபின், சிவேஷ் குமார் ஆகியோர் வேட்பாளர்களாக போட்டியிட்டுள்ளனர். அதேபோல் நிதிஷ் குமார் கட்சி சார்பில் 2 பேர் வேட்பாளராக போட்டியிட உள்ளனர். இதில் ஐக்கிய ஜனதாதளம் சார்பில் ராம்நாத் தாகூர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஆனால் இன்னொரு வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.

நிதிஷ் குமார் வேட்புமனு

அந்த இடத்தில் தான் நிதிஷ் குமார் போட்டியிட உள்ளார். இன்று வேட்புமனுத்தாக்கல் முடியும் நிலையில் காலை 11.30 மணிக்கு நிதிஷ் குமார் ராஜ்யசபா எம்பியாக வேட்புமனுத்தாக்கல் செய்தார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் உடனிருந்தனர். இதன்மூலம் நிதிஷ் குமார் ராஜ்யசபா எம்பி ஆவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

முதல்வர் மாற்றம்

இதனால் அவரால் முதல்வராக நீடிக்க முடியாது. அவர் கண்டிப்பாக முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அந்த வகையில் பார்த்தால் பாஜகவை சேர்ந்த ஒருவர் முதல்வராக பதவியேற்கலாம் என்று கூறப்படுகிறது. தற்போது பாஜகவுக்கு 89 எம்எல்ஏக்கள் உள்ளன. மேலும் இதன் பின்னணியில் முக்கிய விஷயம் உள்ளது.

பின்னணி என்ன?

நிதிஷ் குமாருக்கு தற்போது 75 வயது ஆகிறது. இதனால் தனக்கு பிறகு கட்சியை தனது வாரிசு வழிநடத்த வேண்டும் என்று நிதிஷ் குமார் விரும்புவதாக கூறப்படுகிறது. நிதிஷ் குமாருக்கு , நிஷாந்த் குமார் என்ற மகன் உள்ளார். அவருக்கு வயது 45 வயது ஆகிறது. இவர் தற்போது வரை நேரடியாக அரசியலில் ஈடுபடவில்லை.

ஆனால் தேர்தல் பணிகளை மட்டும் மேற்கொண்டு வருகிறார். கட்சியில் எந்த பொறுப்பிலும் அவர் இல்லை. இருப்பினும் கடந்த ஆண்டு இறுதயிலேயே விரைவில் நிதி்ஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமார் அரசியலில் என்ட்ரி கொடுப்பார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் தான் நிஷாந்த் குமாரை பீகாரில் தனது அரசியல் வாரிசாக்க நிதிஷ் குமார் விரும்புகிறார்.

இதனால் நேரடியாக கட்சியில் பொறுப்பு கொடுத்தால் யாரும் மதிக்க மாட்டார்கள். அதேபோல் நேரடியாக அவரை முதல்வராக்கினால் மக்களும், சொந்த கட்சியினரும், கூட்டணியில் உள்ள கட்சியினரும் ஏற்க மாட்டார்கள். இதனால், தான் ராஜ்யசபா எம்பியாகிவிட்டு பாஜகவுக்கு முதல்வர் பதவியை விட்டு கொடுத்து மகன் நிஷாந்த் குமாரை துணை முதல்வராக்க நிதிஷ் குமார் விரும்புவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+