நிதிஷ் குமாருக்கு கல்தாவா? முதல்வர் யார்.. சஸ்பென்ஸ் வைக்கும் பாஜக.. அதிரும் பீகார்
பாட்னா: பீகார் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில், அம்மாநிலத்தின் முதல்வராக மீண்டும் நிதிஷ் குமாரே பதவி ஏற்பார் என ஒருபுறம் அவரது ஐக்கிய ஜனதா தளம் கட்சி கூறி வருகிறார்கள். அதே சமயம் கூட்டணியில் உள்ள பாஜகவோ இன்னும் அது குறித்து ஒரு கருத்து கூட சொல்லாமல் இருப்பதால் பீகார் முதல்வராக நிதிஷ் குமார் பதவியேற்பாரா என்பதில் இழுபறி நீடித்துள்ளது.
நடந்து முடிந்த பீகார் சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் பாஜக மற்றும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி 202 தொகுதிகளை பிடித்து இமாலய வெற்றி பெற்றது. இதனால் ஆளுங்கட்சியே மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது.

பீகார் சட்டசபை தேர்தல்
பீகாரில் தற்போது முதல்வராக இருந்து வரும் நிதிஷ் குமாரே மீண்டும் முதல்வராக பதவியேற்பார் என்றே கூறப்படுகிறது. எனினும் இந்த முறை தனிப்பெரும்பான்மையாக வெற்றி பெற்றுள்ள பாஜக நிதிஷ் குமார் தான் முதல்வர் என்பதை சொல்லாமலேயே இருந்து வருகிறது. தேர்தலை சந்திக்கும் முன்பு கூட யார் முதல்வர் வேட்பாளர் என்பதை என்.டி.ஏ கூட்டணி அறிவிக்காமலேயே போட்டியிட்டது.
பீகாரில் 25 ஆண்டுகள் முதல்வர் பதவியில் இருந்தவர் நிதிஷ் குமார். தற்போதும் தொடர்ந்து 19 ஆண்டுகளாக அவரே அம்மாநில முதல்வராக பதவி வகித்து வருகிறார். (இடையில் ஒரு ஆண்டை தவிர). இந்த நிலையில் தான் மீண்டும் பாஜக கூட்டணி மற்றும் நிதிஷ் குமார் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதனால் நிதிஷ் குமாரே முதல்வர் பதவி வகிப்பார் என்று கூறப்படுகிறது.
மீண்டும் முதல்வராகும் நிதிஷ் குமார்
எனினும் பாஜக இது பற்றி ஒன்றும் சொல்லாமல் இருப்பதால் இழுபறி ஏற்பட்டு இருக்கிறது. இதற்கிடையே தான் மத்திய உள்துறை அமைச்சரை ஜேபி நட்டா இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதில் பீகார் தேர்தல் முடிவுகள் பற்றியும், பீகாரில் அடுத்த முதல்வர் யார் என்பது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இது ஒரு புறம் இருக்க நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தள நிர்வாகிகள், முக்கிய தலைவர்கள் நிதிஷ் குமாரை அவரது இல்லத்தில் சந்தித்து பேசி வருகிறார்கள். இதுபோல் லோக்ஜனசக்தி கட்சி தலைவர் சிராஜ் பஸ்வான் நிதிஷ்குமாரை சந்தித்து பேசியுள்ளார். கூட்டணி கட்சி தலைவர்கள், எம்.எல்.ஏக்கள், வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்கள் பலரும் நிதிஷ் குமார் முதல்வராக தொடருவதற்கு ஆதரவு தெரிவித்தனர்.
மவுனம் காக்கும் பாஜக
இந்த நிலையில் தான் பாட்னாவில் அமைச்சரவை கூட உள்ளது. இந்த கூட்டத்திற்கு பிறகு முதல்வர் நிதிஷ் குமார் ஆளுநர் ஆரிப் முகமது கானை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளிக்க உள்ளார். இதனை தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் சட்டப்பேரவை கட்சி தலைவர் தேர்வு செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
ஐக்கிய ஜனதா தள கட்சியினர் நிதிஷ் குமார் தான் மீண்டும் முதல்வராக வர வேண்டும் என்று கூறி வருகிறார்கள். ஆனால் கலந்து ஆலோசித்த பிறகு தான் பீகார் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை பாஜக அறிவிக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் மீண்டும் நிதிஷ் குமாரே பீகார் முதல்வராக வருவாரா என்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.
பீகார் சட்டசபை தேர்தலில் தலா 101 தொகுதிகளில் பாஜக, நிதிஷ் குமாரின் ஜேடியூ கட்சிகள் போட்டியிட்டன. இதில் பாஜக 89 தொகுதிகளிலும், 85 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.
-
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
கடும் கோபத்தில் மோடி.. சென்னை ரோடுஷோ - பிரசாரமே வேண்டாம்.. பாஜக தலைகளை பந்தாட தயாராகும் மேலிடம் -
அண்ணாமலை போட்டியிடும் தொகுதி இதுவா? ஈரோட்டில் பாஜக செம ட்விஸ்டு.. மொத்த மொடக்குறிச்சியும் வெயிடிங் -
மொடக்குறிச்சி, திருப்பூர் தெற்கு செட் ஆகாது.. கோவையில் 1 தொகுதியை ஒதுக்குங்க.. அண்ணாமலை பிடிவாதம்! -
ராதாபுரத்தில் தமிழிசை, மயிலாப்பூரில் அண்ணாமலை? பாஜக எடுக்கும் முடிவு.. கமலாலயத்தில் நடந்தது என்ன? -
2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியில்லை? மொடக்குறிச்சியை திணிக்கும் பாஜக மேலிடம்? Annamalai அப்செட் -
இது தமிழ்நாடு ப்ரோ.. பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி! கை கொடுக்காத ஷாவின் ’அறுபடை வீடு’ பாலிடிக்ஸ் -
யாரு? எங்க? பாஜகவில் பரபர பஞ்சாயத்து! அதிமுகவால் கடுப்பான டெல்லி! மொடக்குறிச்சியில் அண்ணாமலை போட்டி? -
இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி? -
சென்னை Red zone.. நாளை சென்னைக்கு வரும் பிரதமர் மோடி.. டிரோன்களுக்கு தடை.. கடும் பாதுகாப்பு! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்? -
Election Exclusive: அந்த பக்கம் சசிகலா..இந்த பக்கம் ராமதாஸ்! எடப்பாடிக்கு எல்லா பக்கமும் சிக்கல் தான்! 2026 ரொம்ப கஷ்டம்












Click it and Unblock the Notifications