பாஜக கூட்டணியில் முதல் ஷாக்.. அமித் ஷாவின் 'கனவு திட்டத்தை' அமல்படுத்த நிதிஷ் குமார் மறுப்பு
பாட்னா: குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு நாடு முழுக்க கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கக்கூடிய ஐக்கிய ஜனதா தளம் கட்சி, பீகார் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) திட்டத்தை செயல்படுத்த மாட்டோம் என்று அறிவித்து பாஜகவுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
தேசிய குடியுரிமை சட்டத் திருத்தத்தை நிறைவேற்றிய பிறகு, அடுத்த கட்டமாக தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டம் அமல்படுத்தப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா ஏற்கனவே அறிவித்திருந்தார்.

2024 ஆம் ஆண்டுக்குள் இந்த நாட்டில் சட்டவிரோதமாக குடியேறிய அனைவரையும் வெளியேற்றுவது தான் இந்த திட்டத்தின் நோக்கம் என்பதும் அமித்ஷா கருத்து.
வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் வந்து குடியேறி உள்ள முஸ்லிம்களை தான் பொதுவாக அமித்ஷா இவ்வாறு குறிப்பிட்டு பேசுவது வழக்கம். இந்த நிலையில்தான் சிறுபான்மையினர் பிரிவை சேர்ந்த குழு ஒன்று, பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதாதளம் தலைவருமான, நிதீஷ் குமாரை, சந்தித்து தங்கள் கவலையை தெரிவித்தது. அவர்களுக்கு சமாதானம் கூறி அனுப்பி வைத்திருந்தார் நிதிஷ்குமார்.
இந்த நிலையில் இன்று செய்தியாளர் சந்திப்பின்போது தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை அமல்படுத்துவீர்களா என்ற நிருபர்களின் கேள்விக்கு, பீகாரில் எதற்காக அமல்படுத்த வேண்டும் என்று பதில் கேள்வி கேட்டார் நிதிஷ்குமார்.
இதன் மூலம் பாஜக கூட்டணியில் உள்ள ஒரு கட்சி தேசிய குடிமக்கள் பதிவு நடைமுறைக்கு ஒத்துழைக்க முதல் முறையாக மறுப்பு தெரிவித்து உள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. தேசிய குடிமக்கள் சட்டத் திருத்தத்திற்கே, நாடு முழுக்க இவ்வளவு எதிர்ப்பு வரும் நிலையில், தேசிய குடிமக்கள் பதிவு திட்டத்திற்கு இதைவிட அதிக எதிர்ப்பு வரலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் நிதிஷ்குமார் இந்த முடிவுக்கு வந்துள்ளதாக தெரிகிறது.
தேசிய குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் வாக்களித்தது நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதா தளம். ஆனால் அந்தக் கட்சியும் கூட தேசிய குடிமக்கள் பதிவு திட்டத்தை ஒடிசா மாநிலத்தில் செயல்படுத்தப் போவதில்லை என்று அறிவித்துள்ளது.
இந்த கட்சி பாஜக கூட்டணியில் இல்லை என்ற போதிலும் கூட, குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு ஆதரவாக தான் வாக்கு அளித்து இருந்தது. ஆனால் இந்த விஷயத்தில் அந்த கட்சியும் பின் வாங்கியுள்ளது. நாடு தழுவிய அளவில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எழுந்துள்ள எதிர்ப்பு ஒவ்வொரு கட்சிகளையும் தங்கள் நிலைப்பாட்டில் இருந்து பின்னோக்கி செய்ய வைத்திருக்கிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் இன்று சந்திப்பு -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications