பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ராஜினாமா! சிறுவயது ஆசைக்காக ராஜ்யசபா எம்பியாகிறார்.. அவரே தந்த விளக்கம்
பாட்னா: பீகார் முதல்வராக இருக்கும் நிதிஷ் குமார் இன்று ராஜ்யசபா தேர்தலில் வேட்புமனுத்தாக்கல் செய்ய உள்ளார். இதன்மூலம் தேசிய அரசியலுக்கு செல்லும் நிதிஷ் குமார் பீகார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதன் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்.
பீகார் முதல்வராக இருப்பவர் நிதிஷ் குமார். தற்போது 10 வது முறையாக முதல்வராக அவர் உள்ளார். இந்நிலையில் தான் நிதிஷ் குமார் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளார். பீகாரில் காலியாக உள்ள 5 ராஜ்யசபா இடங்களுக்கு இன்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவு பெற உள்ளது.

இந்நிலையில் தான் நிதிஷ் குமார் இன்று வேட்புமனுத்தாக்கல் செய்ய உள்ளார். இதனை நிதிஷ் குமார் உறுதி செய்துள்ளார்.
நிதிஷ் குமார் விளக்கம்
இதுபற்றி நிதிஷ்குமார் தனது எக்ஸ் பக்கத்தில், ''கடந்த 20 ஆண்டுகளாக பீகார் மக்கள் தொடர்ந்து என் மீது நம்பிக்கையும், ஆதரவும் வழங்கினீர்கள். இந்த ஆதரவில் தான் பீகாருக்கும், அனைவருக்கும் முழு அர்ப்பணிப்புடன் சேவை செய்து வருகிறோம்.
மக்களுக்கு நன்றி
உங்களின் நம்பிக்கை மற்றும் ஆதரவு தான் இன்றைய பீகாரின் வளர்ச்சிக்கு புதிய பரிமாணத்தை வழங்கி உள்ளது. இதற்காக உங்களுக்கு நான் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
சின்ன வயது ஆசை
எனது நாடாளுமன்ற பயணத்தின் தொடக்கத்திலேய பீகார் சட்டசபையின் இரு சபைகளிலும், நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் பணியாற்ற வேண்டும் என்ற ஆசை என் இதயத்தில் இருந்தது. இந்த விருப்பத்தை நிறைவேற்ற இந்த முறை நடைபெற உள்ள ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்டு எம்பியாக விரும்புகிறேன்.
பீகார் மக்களுடனான எனது உறவு எதிர்காலத்திலும் தொடரும். வளர்ந்த பீகாரை உருவாக்க உங்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கான எனது உறுதிப்பாடு உறுதியாக இருக்கும் என்பதை நேர்மையுடன் உங்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன்.
புதிய அரசாங்கத்துக்கு எனது முழு ஒத்துழைப்பும், வழிக்காட்டுதலும் இருக்கும்'' என்றார். இதன்மூலம் நிதிஷ் குமார் பீகார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ராஜ்யசபா எம்பியாவது உறுதியாகி உள்ளது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications