Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ராஜினாமா! சிறுவயது ஆசைக்காக ராஜ்யசபா எம்பியாகிறார்.. அவரே தந்த விளக்கம்

Subscribe to Oneindia Tamil

பாட்னா: பீகார் முதல்வராக இருக்கும் நிதிஷ் குமார் இன்று ராஜ்யசபா தேர்தலில் வேட்புமனுத்தாக்கல் செய்ய உள்ளார். இதன்மூலம் தேசிய அரசியலுக்கு செல்லும் நிதிஷ் குமார் பீகார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதன் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்.

பீகார் முதல்வராக இருப்பவர் நிதிஷ் குமார். தற்போது 10 வது முறையாக முதல்வராக அவர் உள்ளார். இந்நிலையில் தான் நிதிஷ் குமார் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளார். பீகாரில் காலியாக உள்ள 5 ராஜ்யசபா இடங்களுக்கு இன்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவு பெற உள்ளது.

nitish-kumar-says-i-want-to-become-rajya-sabha-mp-so-he-decided-to-resign-his-bihar-cm-post

இந்நிலையில் தான் நிதிஷ் குமார் இன்று வேட்புமனுத்தாக்கல் செய்ய உள்ளார். இதனை நிதிஷ் குமார் உறுதி செய்துள்ளார்.

நிதிஷ் குமார் விளக்கம்

இதுபற்றி நிதிஷ்குமார் தனது எக்ஸ் பக்கத்தில், ''கடந்த 20 ஆண்டுகளாக பீகார் மக்கள் தொடர்ந்து என் மீது நம்பிக்கையும், ஆதரவும் வழங்கினீர்கள். இந்த ஆதரவில் தான் பீகாருக்கும், அனைவருக்கும் முழு அர்ப்பணிப்புடன் சேவை செய்து வருகிறோம்.

பீகார் முதல்வர் பதவி வேண்டாம்.. ராஜ்யசபா எம்பியாகும் நிதிஷ் குமார்.. இன்று மனு.. எல்லாம் மகனுக்காக!
பீகார் முதல்வர் பதவி வேண்டாம்.. ராஜ்யசபா எம்பியாகும் நிதிஷ் குமார்.. இன்று மனு.. எல்லாம் மகனுக்காக!

மக்களுக்கு நன்றி

உங்களின் நம்பிக்கை மற்றும் ஆதரவு தான் இன்றைய பீகாரின் வளர்ச்சிக்கு புதிய பரிமாணத்தை வழங்கி உள்ளது. இதற்காக உங்களுக்கு நான் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

சின்ன வயது ஆசை

எனது நாடாளுமன்ற பயணத்தின் தொடக்கத்திலேய பீகார் சட்டசபையின் இரு சபைகளிலும், நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் பணியாற்ற வேண்டும் என்ற ஆசை என் இதயத்தில் இருந்தது. இந்த விருப்பத்தை நிறைவேற்ற இந்த முறை நடைபெற உள்ள ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்டு எம்பியாக விரும்புகிறேன்.

நிதிஷ் குமார் ராஜினாமா.. பீகாரை கைப்பற்றும் பாஜக.. அடுத்த முதல்வர் யார்? டாப் 4 பெயர்கள் இதோ
நிதிஷ் குமார் ராஜினாமா.. பீகாரை கைப்பற்றும் பாஜக.. அடுத்த முதல்வர் யார்? டாப் 4 பெயர்கள் இதோ

பீகார் மக்களுடனான எனது உறவு எதிர்காலத்திலும் தொடரும். வளர்ந்த பீகாரை உருவாக்க உங்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கான எனது உறுதிப்பாடு உறுதியாக இருக்கும் என்பதை நேர்மையுடன் உங்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன்.

புதிய அரசாங்கத்துக்கு எனது முழு ஒத்துழைப்பும், வழிக்காட்டுதலும் இருக்கும்'' என்றார். இதன்மூலம் நிதிஷ் குமார் பீகார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ராஜ்யசபா எம்பியாவது உறுதியாகி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+