ஒடிஷா ரயில் விபத்து: பீகார் மாநிலத்தை சேர்ந்த 43 பேர் பலி- 88 பேர் கதி இன்னமும் தெரியவில்லை!
பாட்னா: ஒடிஷாவின் பாலசோர் பகுதியில் நிகழ்ந்த ரயில்கள் விபத்தில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 43 பேர் பலியாகினர். மேலும் 88 பேர் கதி என்ன என்பது இன்னமும் தெரியவில்லை என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் இருந்து தமிழ்நாடு நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், சரக்கு ரயில் மற்றும் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் ஆகியவை ஒடிஷா பாலசோர் அருகே விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் 288 பேர் பலியானதாக அதிகார்ப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியோ, பலி எண்ணிக்கையை மறைக்கிறது மத்திய பாஜக அரசு; மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பலரையும் காணவில்லை என குற்றம்சாட்டி இருந்தார்.

இந்த நிலையில் பீகார் மாநில அரசு தங்களது மாநிலத்தை சேர்ந்த 43 பேர், ஒடிஷா ரயில் விபத்தில் உயிரிழந்துவிட்டனர்; 44 பேர் படுகாயமடைந்துள்ளனர்; மேலும் 88 பேர் நிலைமை என்ன என்பது தெரியவில்லை என கூறியுள்ளது. ஒடிஷா ரயில் விபத்தில் பலியான 100க்கும் மேற்பட்டோர் உடல்கள் அடையாளம் காணப்படவில்லை என கூறப்படும் நிலையில் பீகார் அரசு இத்தகவலை வெளியிட்டுள்ளது.
முன்னதாக ஒடிஷா ரயில் விபத்து தொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. ஒடிஷா ரயில் விபத்துக்கு நாசவேலை காரணமாக இருக்கலாம் என மத்திய அமைச்சர்கள் கூறி வந்தனர். இதனையடுத்து திடீரென சிபிஐ விசாரணைக்கு ரயில்வே வாரியம் பரிந்துரைத்தது. தற்போது சிபிஐ நடத்தி வரும் விசாரணைகளில் பல்வேறு சந்தேகத்துக்குரிய கேள்விகளை முன்வைக்கப்படுவதால் விமர்சனங்களுக்கும் உள்ளாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்!












Click it and Unblock the Notifications