Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாறும் வரலாறு! மோதலுக்கு முடிவுரை! பல்டி அடித்த நிதிஷ் குமார்! ஜனாதிபதி தேர்தலுக்காக முக்கிய முடிவு

Subscribe to Oneindia Tamil

பாட்னா: பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஜனாதிபதி வேட்பாளரான திரெளபதி முர்முவுக்கு நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. பீகாரில் பாஜக-ஐக்கிய ஜனதாதளம் கட்சி கூட்டணியில் விரிசல் போக்கு உள்ள நிலையில் நிதிஷ் குமாரின் இந்த முடிவு ஆச்சரியமளிக்கிறது.

Recommended Video

    Draupadi Murmu VS Yashwant Sinha | மோதும் BJP முன்னாள் நிர்வாகிகள் | Next President Of India *India

    பீகாரில் பாஜக-ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் நிதிஷ் குமார் முதல்வராக உள்ளார்.

    இந்நிலையில் சமீப காலமாக பாஜக- ஐக்கிய ஜனதாதளம் கட்சியினர் இடையே மோதல் போக்கு உள்ளது. குறிப்பாக முதல்வர் நிதிஷ் குமார் கூட பாஜகவினரை விமர்சனம் செய்து வந்தார்.

    ஜனாதிபதி தேர்தலில் பல்டி

    ஜனாதிபதி தேர்தலில் பல்டி

    இதனால் பாஜக-ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் கூட்டணி விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. அதோடு பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளருக்கும் ஐக்கிய ஜனதாதளம் கட்சி ஆதரவு தெரிவிக்காது என்ற தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தான் நிதிஷ் குமார் பல்டி அடித்துள்ளார்.

    திரெளபதி முர்முவுக்கு ஆதரவு

    திரெளபதி முர்முவுக்கு ஆதரவு

    அதாவது ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய ஜனதாதளம் கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளரான திரெளபதி முர்முவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது அறிவித்துள்ளது. இதுதொடர்பாக ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தேசிய தலைவர் ராஜீவ் ரஞ்சன் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில், ‛‛ பீகார் முதல்வர் நிதிஷ் குமார் எப்போதும் பெண்களுக்கான அதிகாரம், நலிவடைந்த பிரிவினரின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது பழங்குடி வகுப்பை சேர்ந்த திரெளபதி முர்மு தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த முடிவை வரவேற்று திரெளபதி முர்முக்கு ஐக்கிய ஜனதாதளம் கட்சி ஆதரவு வழங்கும். அவரது வெற்றி நிச்சயம்'' என தெரிவித்துள்ளார்.

    பிரதமருக்கு நன்றி தெரிவித்த நிதிஷ்

    பிரதமருக்கு நன்றி தெரிவித்த நிதிஷ்

    மேலும் இதுதொடர்பாக இன்று நிதிஷ் குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதில், ‛‛திரௌபதி முர்முவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தியது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் பழங்குடியின பெண். நாட்டின் உயரிய பதவிக்கு பழங்குடியின பெண் ஒருவர் பரிந்துரைக்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. திரெளபதி முர்மு இதற்கு முன்பு அமைச்சராக இருந்துள்ளார். ஒடிசா மற்றும் ஜார்கண்ட் ஆளுநராகவும் செயல்பட்டுள்ளார். இவரை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்த பிரதமருக்கு நன்றி'' என குறிப்பிட்டுள்ளார்.

    வரலாறு மாறுகிறது

    வரலாறு மாறுகிறது

    நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சி கடந்த இரண்டு முறை நடந்த ஜனாதிபதி தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு எதிரான வேட்பாளர்களுக்கு தான் ஓட்டளித்தது. 2017ல் காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சிகளுடன் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சி கூட்டணி அமைத்து இருந்தது. அப்போது தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பீகார் ஆளுநராக இருந்த ராம்நாத் கோவிந்தை பாஜக ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தியது. இதையடுத்து ராம்நாத் கோவிந்தை நிதிஷ் குமார் கட்சி ஆதரித்தது. அதற்கு முன்பு 2012ல் நிதிஷ் குமார் கட்சி தேசிய ஜனநாயக கட்சியின் ஒருபகுதியாக இருந்தாலும் கூட காங்கிரஸின் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் பிரணாப் முகர்ஜியை ஆதரித்து ஓட்டளித்தது. இந்நிலையில் தான் தற்போது பாஜகவுடன் கூட்டணி அமைத்து பாஜக முன்நிறுத்தும் திரெளபதி முர்முவுக்கு நிதிஷ் குமார் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+