Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இவ்வளவு நடக்குதே- மத்திய அரசு ஏன் கனத்த மவுனம்? வட மாநில தொழிலாளர் விவகாரத்தில் தேஜஸ்வி யாதவ் கேள்வி

வட இந்திய தொழிலாளர் விவகாரத்தில் மத்திய அரசு மவுனம் ஏன் என்கிறார் தேஜஸ்வி யாதவ்.

Subscribe to Oneindia Tamil

பாட்னா: வட மாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் மத்திய பாஜக அரசு தலையிட்டு பிரச்சனைக்கு சுமூக தீர்வு காண வேண்டும் என்று பீகார் துணை முதல்வரும் ஆர்ஜேடி தலைவருமான தேஜஸ்வி யாதவ் வலியுறுத்தி உள்ளார்.

சென்னையில் அண்மையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா நடைபெற்றது. இதில் வட இந்திய அரசியல் தலைவர்களான பரூக் அப்துல்லா, அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் வேட்பாளர் என்றும் தேசிய அரசியலில் அவர் தீவிரம் காட்ட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. மேலும் தாம் தேசிய அரசியலில்தான் இருக்கிறேன் என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார். 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிதான் பாஜகவை வீழ்த்தும் என ஆணித்தரமாகவும் முதல்வர் ஸ்டாலின் பேசியிருந்தார்.

Tejashwi Yadav questions Why Centre no concern on North Indian Workers issue?

சென்னையில் முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை தொடர்ந்து தேசிய அரசியலில் திமுகவின் வியூகம் தொடர்பாக விவாதங்கள் எழுந்தன. இந்த நிலையில் திடீரன தமிழ்நாட்டில் வட இந்திய தொழிலாளர்கள் கொல்லப்படுகிறார்கள் என வதந்தியை பீகார் பாஜகவினர் பரப்பிவிட்டனர். இது சமூக வலைதளங்களில் காட்டுத் தீயாக பகிரப்பட்டது. இந்த விவகாரம் பீகார் மாநிலத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியது. பீகார் சட்டசபையிலும் எதிரொலித்தது. இதனைத் தொடர்ந்து பீகார், ஜார்க்கண்ட் மாநில அரசுகள், தமிழ்நாட்டுக்கு குழுவை அனுப்பி வட் இந்திய தொழிலாளர்கள் தொடர்பாக ஆய்வு செய்தது. தமிழ்நாட்டில் வட இந்திய தொழிலாளர்கள் மிகவும் பாதுகாப்பாக இருப்பதை பீகார், ஜார்க்கண்ட் மாநில குழுக்கள் உறுதி செய்தன.

மேலும் தமிழ்நாட்டில் வட இந்தியர்களுக்கு எதிரான நிலைமை இருப்பதாக வதந்தி பரப்பியதாக பத்திரிகை நிறுவனங்கள், பாஜக பிரமுகர்கள் மீது முதலில் வழக்குகள் பாய்ந்தன. பின்னர் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீதும் இந்த விவகாரத்தில் வதந்தி பரப்பியதாக வழக்குகள் போடப்பட்டுள்ளன.

இந்நிலையில் வட இந்திய தொழிலாளர் விவகாரம் குறித்து ஏ.என்.ஐ.செய்தி நிறுவனத்துக்கு தேஜஸ்வி யாதவ் அளித்த பேட்டியில், தமிழ்நாடு, பீகார் அரசுகள் இந்த பிரச்சனைக்கு சுமூகமாக தீர்வு கண்டுள்ளன. ஆனால் மத்திய அரசு இவ்விவகாரத்தில் எதுவும் பேசாமல் இருக்கிறது. இந்த பிரச்சனையில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+