உடலை தகனம் செய்யணும் ... பணம் கொடுங்க... விவசாயி உடலுடன் வங்கிக்கு படையெடுத்த கிராம மக்கள்!
பாட்னா: பிகார் மாநிலம் பாட்னாவில் இறுதி சடங்குக்கு பணம் இல்லததால் விவசாயி உடலுடன் அவர் கணக்கு வைத்திருந்த வங்கிக்கு சென்ற கிராம மக்கள் பணம் கொடுக்கும்படி கேட்டனர்.
நீண்ட நேரத்திற்கு பிறகு கிராம மக்களுக்கு சிறிதளவு பணம் கொடுக்கப்பட்டது. அதன்பின்பு அவர்கள் மகேஷ் உடலுடன் அங்கிருந்து சென்றனர்.
நாங்கள் சந்தித்த வித்தியாசமான வழக்கு இது என்று உள்ளூர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

குடிசையில் வசித்தார்
பிகார் மாநிலம் பாட்னாவில் உள்ள புறநகர் பகுதியில் வசித்து வந்தவர் மகேஷ்(55). விவசாயி. திருமணமாகாத இவர் பல ஆண்டுகளுக்கு முன்பு தனது சகோதரனை இழந்தார். வேறொருவரின் நிலத்தில் கட்டப்பட்ட குடிசையில் வசித்து வந்தார். மகேஷ் பல மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார்.

உடல் நலக்குறைவால் இறந்தார்
அவருக்கு உறவினர்கள் யாரும் இல்லாததால் அக்கம்பக்கத்தினர் அவருக்கு சமைத்த உணவு மற்றும் பிற பொருட்களை வழங்கி வந்தனர். இந்த நிலையில் மகேஷ் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். ஆனால் பல மணி நேரத்திற்கு பின்பே அவர் இறந்தது அக்கம்பக்கத்தினருக்கு தெரியவந்தது.

கைகொடுத்த பாஸ்புக்
இதனை தொடர்ந்து உடலை தகனம் செய்ய அக்கம்பக்கத்தினர் அவரது வீட்டில் பணம் ஏதாவது உள்ளதா? என்று தேடினர். ஆனால் அங்கு பணமோ வேறு எந்த பொருளுமோ இல்லை. கடைசியில் அவர் வைத்திருந்த கனரா வங்கி பாஸ்புக் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வங்கிக்கணக்கில் 1,17,298 ரூபாய் சேமிப்பில் இருந்தது தெரியவந்தது.

வங்கிக்கு படையெடுத்தனர்
இதனை தொடர்ந்து கிராம மக்கள், மகேஷ் உடலை தூக்கிகொண்டு அங்குள்ள கனரா வங்கி கிளைக்கு படையெடுத்தனர். ''மகேஷ் உடலை தகனம் செய்ய வேண்டும் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.20,000 கொடுங்கள்'' என்று மக்கள் கேட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த வங்கி மேலாளர் போலிஸுக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் பேச்சுவார்த்தை
அதன்பேரில் போலீசார் அங்கு வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பணம் கொடுக்கும் வரை, அங்கு இருந்து செல்ல முடியாது என மக்கள் கூறினார். நீண்ட நேரத்திற்கு பிறகு அவர்களுக்கு சிறிதளவு பணம் கொடுக்கப்பட்டது. அதன்பின்பு மக்கள் மகேஷ் உடலுடன் அங்கிருந்து சென்றனர்.

வித்தியாசமான வழக்கு
இந்த அசாதாரண காட்சிகள் பீதியை உருவாக்கியதாக கனரா வங்கியின் கிளை மேலாளர் சஞ்சீவ் குமார் தெரிவித்தார். நாங்கள் சந்தித்த வித்தியாசமான வழக்கு இது என்று உள்ளூர் போலீஸ் அதிகாரி அம்ரேந்தர் குமார் கூறினார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications