ஜஸ்ட் 6 மாசம்தான்.. பெண்களின் துணியை துவைக்க வேண்டும்.. பாலியல் குற்றவாளிக்கு அதிரடி தண்டனை
பெண்களின் துணிகளை 6 மாதம் துவைக்க கோர்ட் நிபந்தனை ஜாமீன் தந்துள்ளது
பாட்னா: பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு கோர்ட் ஜாமீன் தந்துள்ளது.. ஆனால், பெண்களின் துணிகளை 6 மாதங்கள் துவைத்து தர வேண்டும் என்று கோர்ட் நிபந்தனை விதித்து உத்தரவிட்டுள்ளது.
பீகார் மாநிலம் மஜ்ஹோர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் லலன் குமார்.. 20 வயதாகிறது.. இவர் ஒரு சலவை தொழிலாளி ஆவர்.. இவர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு சுமத்தப்பட்டிருந்தது.
இது தொடர்பான வழக்கு விசாரணையும் நடந்து வந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் சிறைக்கு சென்ற லலன் குமாருக்கு சமீபத்தில்தான் ஜாமீன் கிடைத்தது..

ஜாமீன்
ஆனால் நிபந்தனை ஜாமீன் தரப்பட்டது... அதன்படி, அடுத்த 6 மாதங்களுக்கு கிராமத்தில் இருக்கும் 2 ஆயிரம் பெண்களின் துணிகளை துவைத்து, அயர்ன் செய்து கொடுக்க வேண்டுமென்பதுதான் அந்த நிபந்தனையாகும்.
லலன் குமார் ஏற்கெனவே சலவை செய்யும் தொழிலாளி என்றாலும், இது அவருக்கு எளிதான வேலையே என்றாலும், இலவசமாக 6 மாதத்துக்கு பெண்களின் துணி துவைக்க வேண்டும் என்பதே நிபந்தனையின் சாராம்சம்.

சோப் பவுடர்கள்
எனவே, கோர்ட்டின் நிபந்தனை குறித்து மாவட்ட எஸ்பி சந்தோஷ் குமார் சிங் விளக்கமாக எடுத்து சொன்னார். இந்த நிபந்தனையை நிறைவேற்ற, அந்த கிராமத்தினர் அனைவரும் இணைந்து, லலன் குமாருக்கு துணி துவைக்க தேவையான சோப் பவுடர்கள், பிரஷ்கள் போன்றவைகளை தந்தனர்.. இதற்கிடையே, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, போலீசாரின் விசாரணையும் முடிந்துவிட்டது..

நிபந்தனை
வழக்கை முடிக்க இரு தரப்பும் பரஸ்பரம் ஒப்புக் கொள்வதற்கான விண்ணப்பங்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில்தான், குற்றவாளி தனது தகுதிக்கேற்ப சமூகப் பணியாற்றுவதாக ஒப்புகொண்டதையடுத்து, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.. அதுமட்டுமல்ல, இவரது சேவையை பார்த்து 6 மாதங்களுக்கு பிறகு, கிராம தலைவர் மற்றும் அரசு அலுவலர் என 2 பேர் அளிக்கும் சான்றிதழை பொறுத்துதான் இறதி தீர்ப்பளிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

பெருமை
அந்த கிராமத்தின் தலைவர் நசிமா கத்தூன் இதை பற்றி சொல்லும்போது, "இது மிகவும் வரலாற்று சிறப்புமிக்க வாய்ந்த உத்தரவு... இந்த உத்தரவால் கிராமத்தில் இருக்கும் பெண்கள் அனைவரும் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர்.. இந்த உத்தரவால் கிராமத்தின் பெருமையும், பெண்களின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும்" என்றார் என்று தெரிவித்துள்ளார்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications