ஜஸ்ட் 6 மாசம்தான்.. பெண்களின் துணியை துவைக்க வேண்டும்.. பாலியல் குற்றவாளிக்கு அதிரடி தண்டனை
பெண்களின் துணிகளை 6 மாதம் துவைக்க கோர்ட் நிபந்தனை ஜாமீன் தந்துள்ளது
பாட்னா: பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு கோர்ட் ஜாமீன் தந்துள்ளது.. ஆனால், பெண்களின் துணிகளை 6 மாதங்கள் துவைத்து தர வேண்டும் என்று கோர்ட் நிபந்தனை விதித்து உத்தரவிட்டுள்ளது.
பீகார் மாநிலம் மஜ்ஹோர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் லலன் குமார்.. 20 வயதாகிறது.. இவர் ஒரு சலவை தொழிலாளி ஆவர்.. இவர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு சுமத்தப்பட்டிருந்தது.
இது தொடர்பான வழக்கு விசாரணையும் நடந்து வந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் சிறைக்கு சென்ற லலன் குமாருக்கு சமீபத்தில்தான் ஜாமீன் கிடைத்தது..

ஜாமீன்
ஆனால் நிபந்தனை ஜாமீன் தரப்பட்டது... அதன்படி, அடுத்த 6 மாதங்களுக்கு கிராமத்தில் இருக்கும் 2 ஆயிரம் பெண்களின் துணிகளை துவைத்து, அயர்ன் செய்து கொடுக்க வேண்டுமென்பதுதான் அந்த நிபந்தனையாகும்.
லலன் குமார் ஏற்கெனவே சலவை செய்யும் தொழிலாளி என்றாலும், இது அவருக்கு எளிதான வேலையே என்றாலும், இலவசமாக 6 மாதத்துக்கு பெண்களின் துணி துவைக்க வேண்டும் என்பதே நிபந்தனையின் சாராம்சம்.

சோப் பவுடர்கள்
எனவே, கோர்ட்டின் நிபந்தனை குறித்து மாவட்ட எஸ்பி சந்தோஷ் குமார் சிங் விளக்கமாக எடுத்து சொன்னார். இந்த நிபந்தனையை நிறைவேற்ற, அந்த கிராமத்தினர் அனைவரும் இணைந்து, லலன் குமாருக்கு துணி துவைக்க தேவையான சோப் பவுடர்கள், பிரஷ்கள் போன்றவைகளை தந்தனர்.. இதற்கிடையே, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, போலீசாரின் விசாரணையும் முடிந்துவிட்டது..

நிபந்தனை
வழக்கை முடிக்க இரு தரப்பும் பரஸ்பரம் ஒப்புக் கொள்வதற்கான விண்ணப்பங்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில்தான், குற்றவாளி தனது தகுதிக்கேற்ப சமூகப் பணியாற்றுவதாக ஒப்புகொண்டதையடுத்து, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.. அதுமட்டுமல்ல, இவரது சேவையை பார்த்து 6 மாதங்களுக்கு பிறகு, கிராம தலைவர் மற்றும் அரசு அலுவலர் என 2 பேர் அளிக்கும் சான்றிதழை பொறுத்துதான் இறதி தீர்ப்பளிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

பெருமை
அந்த கிராமத்தின் தலைவர் நசிமா கத்தூன் இதை பற்றி சொல்லும்போது, "இது மிகவும் வரலாற்று சிறப்புமிக்க வாய்ந்த உத்தரவு... இந்த உத்தரவால் கிராமத்தில் இருக்கும் பெண்கள் அனைவரும் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர்.. இந்த உத்தரவால் கிராமத்தின் பெருமையும், பெண்களின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும்" என்றார் என்று தெரிவித்துள்ளார்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications