நிதீஷ்குமார் தலைமையில் பீகாரை புதிய உயரத்திற்கு கொண்டு செல்வோம் - சுசில் குமார் மோடி
பீகாரின் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் வாக்களித்த மக்களுக்கு துணை முதல்வர் சுசில் குமார் மோடி நன்றி தெரிவித்துள்ளார். நிதிஷ்குமார் தலைமையில் பீகாரை புதிய உயரத்திற்கு கொண்டு செல்வோம் என்றும் கூறியுள்ளார்
பாட்னா: பிரதமர் மோடியின் ஆசியோடு நிதிஷ்குமார் தலைமையில் பீகாரை புதிய உயரத்திற்கு கொண்டு செல்வோம் என்று அம்மாநிலத்தின் துணை முதல்வர் சுஷில்குமார் மோடி தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த பீகார் சட்டசபைத் தேர்தலில் பாஜக, ஜேடியு தலைமையிலான கூட்டணி கட்சி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்தது. நிதிஷ்குமார் ஜேடியு கட்சியை விட பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

இதன் மூலம் நிதிஷ் குமார் முதல்வராக பதவியேற்பதில் சிக்கல் ஏற்படுமோ என்ற சந்தேகம் எழுந்தது. அந்த சந்தேகத்திற்கு பதில் தரும் வகையில் செய்தியாளர்களிடம் பேசிய பீகார் மாநில பாஜக தலைவரும் துணை முதல்வருமான சுசில் குமார் மோடி, இந்த வெற்றி மக்கள் பீகாரின் வளர்ச்சிக்கு அளித்த பரிசு என்று கூறினார். இதயப்பூர்வமாக அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் தெரிவித்தார்.
ராகுல்காந்தி, தேஜஸ்வி யாதவ் ஆகிய இரண்டு இளவரசர்களின் கூட்டணிக்கு மக்கள் தோல்வியை பரிசாக அளித்திருக்கின்றனர் என்று கூறிய சுசில்குமார், வெற்றிக்காக பாடுபட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி தொண்டர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்த வெற்றியை பாஜக தேசிய தலைவர் ஜெ.பி நட்டா, பிரதமர் மோடிக்கு சமர்பிக்கிறோம் என்று கூறினார். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் மீது ராகுல் காந்தி குற்றம் சொல்கிறார். மக்கள் வாக்கு ஜேடியு, பாஜக கூட்டணிக்கு கிடைத்துள்ளது.
பிரதமர் மோடியின் ஆசியுடன், நிதிஷ்குமார் தலைமையின் கீழ் பீகாரை புதிய உயரத்திற்குக் கொண்டு செல்வோம் என்றும் கூறினார் சுசில்குமார் மோடி.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications