Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நிதீஷ்குமார் தலைமையில் பீகாரை புதிய உயரத்திற்கு கொண்டு செல்வோம் - சுசில் குமார் மோடி

பீகாரின் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் வாக்களித்த மக்களுக்கு துணை முதல்வர் சுசில் குமார் மோடி நன்றி தெரிவித்துள்ளார். நிதிஷ்குமார் தலைமையில் பீகாரை புதிய உயரத்திற்கு கொண்டு செல்வோம் என்றும் கூறியுள்ளார்

Subscribe to Oneindia Tamil

பாட்னா: பிரதமர் மோடியின் ஆசியோடு நிதிஷ்குமார் தலைமையில் பீகாரை புதிய உயரத்திற்கு கொண்டு செல்வோம் என்று அம்மாநிலத்தின் துணை முதல்வர் சுஷில்குமார் மோடி தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த பீகார் சட்டசபைத் தேர்தலில் பாஜக, ஜேடியு தலைமையிலான கூட்டணி கட்சி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்தது. நிதிஷ்குமார் ஜேடியு கட்சியை விட பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

பாட்னா: பிரதமர் மோடியின் ஆசியோடு நிதிஷ்குமார் தலைமையில் பீகாரை புதிய உயரத்திற்கு கொண்டு செல்வோம் என்று அம்மாநிலத்தின் துணை முதல்வர் சுஷில்குமார் மோடி தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த பீகார் சட்டசபைத் தேர்தலில் பாஜக, ஜேடியு தலைமையிலான கூட்டணி கட்சி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்தது. நிதிஷ்குமார் ஜேடியு கட்சியை விட பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் நிதிஷ் குமார் முதல்வராக பதவியேற்பதில் சிக்கல் ஏற்படுமோ என்ற சந்தேகம் எழுந்தது. அந்த சந்தேகத்திற்கு பதில் தரும் வகையில் செய்தியாளர்களிடம் பேசிய பீகார் மாநில பாஜக தலைவரும் துணை முதல்வருமான சுசில் குமார் மோடி, இந்த வெற்றி மக்கள் பீகாரின் வளர்ச்சிக்கு அளித்த பரிசு என்று கூறினார். இதயப்பூர்வமாக அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் தெரிவித்தார். ராகுல்காந்தி, தேஜஸ்வி யாதவ் ஆகிய இரண்டு இளவரசர்களின் கூட்டணிக்கு மக்கள் தோல்வியை பரிசாக அளித்திருக்கின்றனர் என்று கூறிய சுசில்குமார், வெற்றிக்காக பாடுபட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி தொண்டர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். இந்த வெற்றியை பாஜக தேசிய தலைவர் ஜெ.பி நட்டா, பிரதமர் மோடிக்கு சமர்பிக்கிறோம் என்று கூறினார். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் மீது ராகுல் காந்தி குற்றம் சொல்கிறார். மக்கள் வாக்கு ஜேடியு, பாஜக கூட்டணிக்கு கிடைத்துள்ளது. பிரதமர் மோடியின் ஆசியுடன், நிதிஷ்குமார் தலைமையின் கீழ் பீகாரை புதிய உயரத்திற்குக் கொண்டு செல்வோம் என்றும் கூறினார் சுசில்குமார் மோடி.

இதன் மூலம் நிதிஷ் குமார் முதல்வராக பதவியேற்பதில் சிக்கல் ஏற்படுமோ என்ற சந்தேகம் எழுந்தது. அந்த சந்தேகத்திற்கு பதில் தரும் வகையில் செய்தியாளர்களிடம் பேசிய பீகார் மாநில பாஜக தலைவரும் துணை முதல்வருமான சுசில் குமார் மோடி, இந்த வெற்றி மக்கள் பீகாரின் வளர்ச்சிக்கு அளித்த பரிசு என்று கூறினார். இதயப்பூர்வமாக அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் தெரிவித்தார்.

ராகுல்காந்தி, தேஜஸ்வி யாதவ் ஆகிய இரண்டு இளவரசர்களின் கூட்டணிக்கு மக்கள் தோல்வியை பரிசாக அளித்திருக்கின்றனர் என்று கூறிய சுசில்குமார், வெற்றிக்காக பாடுபட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி தொண்டர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்த வெற்றியை பாஜக தேசிய தலைவர் ஜெ.பி நட்டா, பிரதமர் மோடிக்கு சமர்பிக்கிறோம் என்று கூறினார். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் மீது ராகுல் காந்தி குற்றம் சொல்கிறார். மக்கள் வாக்கு ஜேடியு, பாஜக கூட்டணிக்கு கிடைத்துள்ளது.

பிரதமர் மோடியின் ஆசியுடன், நிதிஷ்குமார் தலைமையின் கீழ் பீகாரை புதிய உயரத்திற்குக் கொண்டு செல்வோம் என்றும் கூறினார் சுசில்குமார் மோடி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+