"சவப்பெட்டியை" எட்டி உதைத்த "சடலம்".. மயானத்தில் அழுகுரல்.. வாயில் களிமண்ணுடன்.. அலறி ஓடிய பெண்கள்
மயானத்தில் திடீரென வந்த அழுகுரலால் மக்கள் தலைதெறிக்க ஓடினார்கள்
பாட்னா: திடீர்னு கல்லறையில் இருந்து வந்த அழுகுரலை கேட்டு, விறகு சேகரித்து கொண்டிருந்த பெண்கள் அலறி அடித்து கொண்டு ஓடினார்கள்.. என்ன ஆச்சு?
இந்தியாவில் சடலங்களை புதைக்கும்போது, கடைசி நேரத்தில் எத்தனையோ அதிர்ச்சிகரமான சம்பவங்கள் நடந்துள்ளன.. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு பின்னணியை கொண்டதாக இருந்தாலும், பரபரப்பை நிச்சயம் நமக்குள் ஏற்படுத்திவிடும்.
இப்படித்தான், நம்ம ஈரோட்டிலும் ஒரு சம்பவம் சில மாதங்களுக்கு முன்பு நடந்தது.. அவர் பெயர் சத்தியமூர்த்தி கரும்பு வெட்ட கர்நாடகம் போனவர், வீட்டுக்கு திரும்பி வரவேயில்லை..

சத்தியமூர்த்தி
பிறகு பஸ்ஸ்டாண்டில் கிடந்த அழுகிய சடலம், சத்தியமூர்த்திதான் என்று நினைத்து, அதை கொண்டு வந்து வீட்டில் வைத்து இறுதி அஞ்சலி செய்து புதைத்துவிட்டு வந்தனர்.. ஆனால், அன்றைக்கு நள்ளிரவே நிஜமான சத்தியமூர்த்தி வீட்டிற்குள் வந்து நின்றதை பார்த்து குடும்பத்தினர் தலைதெறித்து ஓடினார்கள்.. அதுபோலவே, பெரு நாட்டிலும் ஒரு சம்பவம் நடந்தது.

சவப்பெட்டி ரோசா
லம்பெகியூ பகுதியை சேர்ந்தவர் ரோசா இசபெல் சிஸ்பெடி காலஹா.. ரோசாவுக்கு 36 வயது.. இவர் ஒருநாள் கார் விபத்தில் சிக்கி கொண்டார்.. காரில் இருந்தவர்கள் அனைவரும் படுகாயமடைந்து சிகிச்சைக்காகவும் அனுமதிக்கப்பட்டனர்.. அப்போது ரோசாவும் இன்னொரு நபரும் இறந்துவிட்டதாக பரிசோதித்து பார்த்த டாக்டர்கள் சொல்லிவிட்டார்கள். அதனால், ரோசாவுக்காக சவப்பெட்டி தயாரானது.. ஜெபம் செய்துவிட்டு, ரோசாவை அடக்கம் செய்வதற்காக சவப்பெட்டிக்குள் உறவினர்கள் வைத்தனர்.. திடீரென அந்த சவப்பெட்டியை எட்டி உதைத்தார் ரோசா..

சவப்பெட்டி
இதனால் வெலவெலத்து போன உறவினர்கள் உடனடியாக போலீசுக்கு விஷயத்தை சொன்னார்கள்.. அவர்கள் விரைந்து வந்து, சவப்பெட்டியுடனேயே ரோசாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போதுதான் ரோசா மயக்கத்தில் இருந்தது தெரியவந்தது.. அதனால், உடனடியாக தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது... ஆனால், சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே ரோசா, நிஜமாகவே இறந்துவிட்டார்.. அதுபோலவே, பீகாரில் ஒரு சம்பவம் இப்போது நடந்துள்ளது.. சரண் மாவட்டத்தில், கோபா போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதியில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது..

விறகு சேகரித்த பெண்கள்
இங்குள்ள, மர்ஹா ஆற்றின் கரையில் ஒரு சுடுகாடு உள்ளது.. இந்த சுடுகாட்டுக்கு பக்கத்தில் காடு போன்ற பகுதி இருக்கிறது.. அந்த பகுதியில், சில பெண்கள் நேற்று காலை விறகு சேகரித்து கொண்டிருந்தனர்.. அப்போது மயானத்தில் இருந்து திடீரென அலறல் சத்தம் கேட்டது.. பலமுறை அந்த காட்டுக்குள் விறகு சேகரிக்க சென்ற நிலையில், இதுவரை அப்படி ஒரு சத்தம் மயானத்தில் இருந்து வந்ததில்லையாம்.. அதனால், அந்த பெண்கள் பேய் என நினைத்து, அலறி அடித்து கொண்டு வந்து கிராமத்தில் சொல்லி உள்ளனர்..

கல்லறை
பிறகு கிராம மக்கள் சேர்ந்து, சுடுகாட்டுக்குள் சத்தம் வந்த திசையை சென்று பார்த்துள்ளனர்.. அப்போதுதான், களிமண்ணில் இருந்து சத்தம் கேட்கவும், பதறி போய் தோண்ட ஆரம்பித்தனர்.. அப்போது, சிறுமி உயிருடன் புதைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அந்த சிறுமியின் வாயில் களிமண்ணை அடைத்து வைத்திருந்ததையும் அவர்கள் கண்டு மிரண்டு போய்விட்டனர்.

களிமண்
சிறுமியை மீட்ட கிராம மக்கள் உடனடியாக கோபாவில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்... உடனடியாக சிகிச்சையும் தரப்பட்டது.. அதற்கு பிறகு சிறுமி பேச ஆரம்பித்தார்.. தன்னுடைய பெயர் லாலி என்று சொன்னார்.. அப்பா பெயர் ராஜு சர்மா, அம்மா பெயர் ரேகா ஷர்மா என்றார்.. ஆனால், கிராமத்தின் பெயர் சொல்ல தெரியவில்லை.. அந்த சிறுமி மேலும் சொல்லும்போது, "என் அம்மாவும், என் பாட்டியும் என்னை கல்லறைக்கு அழைத்து வந்தனர்.. நான் அழுது கொண்டே இருந்தேன்.. அதனால், என் வாயில் களிமண்ணை திணித்தனர்.. பிறகு குழிதோண்டி என்னை புதைத்தனர்" என்றார்..

லாலி கண்ணீர்
இதைக் கேட்டு போலீசாரும், டாக்டர்களும் அதிர்ந்து போய்விட்டனர்.. அந்த சிறுமி யார் என்று இதுவரை தெரியவில்லை.. வேறு கிராமத்தை சேர்ந்த சிறுமியை, இங்கு கொண்டு வந்து உயிருடன் புதைத்து விட்டு போன அக்கிரமம் நடந்துள்ளது.. அவரது பெற்றோர் மற்றும் கிராமத்தை அடையாளம் காணும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்... பயந்து போயுள்ள லாலி இன்னமும் அழுதுகொண்டே இருக்கிறாள்..!
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications