அதிகாலையிலேயே கோர சம்பவம்.. சமயபுரத்திற்கு பாதயாத்திரை சென்றவர்கள் மீது மோதிய கார்.. 4 பேர் பலி
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர் கிராமத்தில் சமயபுரத்திற்கு பாதயாத்திரையாகச் சென்று கொண்டிருந்த பக்தர்களின் கூட்டத்துக்குள் புகுந்து கார் விபத்துக்குள்ளானதில் 4 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் பக்தர் பலத்த காயமடைந்த நிலையில் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 65க்கும் மேற்பட்டோர் மாலை அணிந்து, சமயபுரம் கோவிலுக்கு பாத யாத்திரையாகச் சென்றுள்ளனர். அதேபோல, சேலம் மாவட்டம், கெங்கவல்லி பகுதியைச் சேர்ந்த பக்தர்களும் பாத யாத்திரையாக நடந்து சென்று கொண்டிருந்தனர். இவர்கள் இன்று காலை 5 மணியளவில் பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் நோக்கி நடந்து சென்றுள்ளனர்.

அப்போது, சென்னையில் இருந்து திருச்சி நோக்கிச் சென்ற கார் ஒன்று பாதயாத்திரை சென்ற பக்தர்களின் கூட்டத்துக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கடலூர் மாவட்டம், பென்னடம் அருகே உள்ள தோழர்குடிகாடு கிராமத்தைச் சேர்ந்த மலர்க்கொடி, விஜயலட்சுமி, சசிகலா மற்றும் சேலம் மாவட்டம், கெங்கவல்லியைச் சேர்ந்த சித்ரா ஆகிய 4 பக்தர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தோழர்குடிகாட்டைச் சேர்ந்த ஜோதிலட்சுமி என்பவர் படுகாயத்துடன் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து பெரம்பலூர் நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்து, கார் ஓட்டுநரான சென்னை திரிசூலம் ஈஸ்வரன் கோயில் தெருவைச் சேர்ந்த கெளதம் என்பவரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications