ராத்திரியெல்லாம்.. ரெண்டு பேரும்.. தடையா இருந்த என்னை.. கொல்ல பார்த்தார்.. மனைவியின் பகீர் புகார்
மனைவியை கிணற்றில் தள்ளிவிட்டு கொல்ல முயன்றுள்ளார் கணவன்
பெரம்பலூர்: "ராத்திரியெல்லாம் ரெண்டு பேரும்.. பேசிட்டே இருப்பாங்க.. இவங்க கள்ள உறவுக்கு நான் தடையா இருக்கிறேன்னுட்டு என்னை கிணத்துல தள்ளி விட்டு கொலை பண்ண பார்த்தாரு" என்று கணவன் மீது மனைவி பகீர் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் நகராட்சி வடக்கு மாதவி சாலையிலுள்ள எம்ஆர்சி நகரைச் சேர்ந்தவர் சரவணன்.. இவரது மனைவி அன்பரசி.. தனிஷ்கா என்ற 4 வயது மகளும், மேகாஸ்ரீ என்ற ஒரு வயது மகளும் உள்ளனர்.. இதில் தனிஷ்காவை தன்னுடைய அம்மா வீட்டில் விட்டு வளர்த்து வருகிறார் அன்பரசி.. அன்பரசிக்கு 31 வயதாகிறது.
சரவணன், அன்பரசி 2 பேருமே பெரம்பலூரில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் காலேஜில் பேராசிரியராக வேலை பார்த்து வருகின்றனர். இப்போது காலேஜ், ஸ்கூல் லீவு என்பதால், தனிஷ்காவையும் வீட்டுக்கு அழைத்து வந்தனர்.

குடும்பம்
இந்நிலையில், சரவணன், அன்பரசிக்கும் இடையே அடிக்கடி சண்டை வருமாம்.. இவர்களது சண்டை குடும்பத்தில் அனைவருக்குமே தெரிந்த சமாச்சாரம்தானாம்.. வழக்கம்பேல நேற்றும் சண்டை வந்தது.. பிறகு இரவு நேரம்.. வீட்டின் பின்பக்கமுள்ள கிணற்றில் இருந்து அன்பரசியின் அபய குரல் கேட்டது.

குழந்தை
இதனால் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தனர். அப்போது, அன்பரசியும் குழந்தை மேனகாஸ்ரீயும் தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்தனர்.. இதனால் அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்க போராடியும், குழந்தையை மட்டும் காப்பாற்ற முடியவில்லை.. உடனடியாக விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், நீண்ட நேரம் போராடிதான் குழந்தையின் சடலத்தை மீட்டனர்.

விசாரணை
இது சம்பந்தமாக போலீசார் அன்பரசியிடம் விசாரித்தனர்.. அப்போது அவர் கூறியதாவது: எனக்கு 2 குழந்தையுமே பெண்ணா பிறந்துடுச்சு.. இந்த குழந்தைங்க பிறந்ததில் இருந்தே வீட்டில் சண்டைதான்.. கணவன், மாமியார், நாத்தனார் எல்லலோருமே என்னை அடிச்சு கொடுமைப்படுத்தினாங்க.

வாக்குமூலம்
என் கணவனுக்கு அதே காலேஜில் வேலை பார்க்கும் ஒரு பெண்ணுடன் பழக்கம் உள்ளது.. 2 பேரும் நைட்டெல்லாம் மணிக்கணக்கில் போனில் பேசுவார்கள்.. வீடியோ காலும் பண்ணி பேசுவார்கள்.. இவங்களோட கள்ள உறவுக்கு நான் தொந்தரவா இருக்கிறதா நினைச்சாங்க.. அதனாலதான், என்னை கொலை செய்ய முடிவு பண்ணினாரு என் கணவன்.. அவர்தான் என்னை கிணத்துக்குள்ள தள்ளிவிட்டாரு" என்றார்.. இதையடுத்து போலீசார் சரவணன் குடும்பத்தாரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications