ஊரடங்கு காவலுக்கு போன போலீஸ்காரர்.. கரண்ட் கம்பத்தில் பைக் மோதி.. பெரம்பலூரில் பரிதாபம்!
டியூட்டிக்கு சென்று கொண்டிருந்த போலீஸ்காரர் விபத்தில் உயிரிழந்தார்
பெரம்பலூர்: ஊரடங்கு காவலுக்கு பைக்கில் சென்று கொண்டிருந்த போலீஸ்காரர் சாலை விபத்தில் சிக்கியதுடன், கரண்ட் கம்பத்தில் மோதி.. தலை சிதறி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தற்போது நாடு முழுவதும் லாக்டவுன் செய்யப்பட்டுள்ளது.. ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் பொதுமக்கள் யாரும் வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் போலீசாரும் பொதுமக்கள் வெளிநடமாட்டம் இருந்தால் அவர்களை எச்சரித்து வருகின்றனர்.. இதனால் இவர்களது சேவை அளப்பரியதாக உருவெடுத்துள்ளது.
இந்நிலையில், ஊரடங்கு காவல் பணியை மேற்கொள்ள பிரவிஸ் என்ற போலீஸ்காரரும் ஈடுபட்டார்.. இவர் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர்.. தமிழ்நாடு சிறப்பு காவல் படை முதலாம் அணி திருச்சி 'ஏ' நிறுமத்தில் வேலை பார்த்து வருகிறார்.. வழக்கம்போல் கண்காணிப்பு பணியை மேற்கொள்ள இன்று காலையில் பைக்கில் கிளம்பி சென்றார்.
அப்போது எதிரே வேகமாக வந்த வாகனம் ஒன்று எதிர்பாராதவிதமாக பிரவிஸ் மீது மோதியது.. இதில் நிலைதடுமாறி பைக்குடன் ரோட்டோரம் இருந்த கரண்ட் கம்பத்தில் பயங்கரமாக மோதிவிட்டார் பிரவிஸ்.. அப்போது கரண்ட் கம்பத்தில் அவரது தலை மோதி சிதறியது.. ரத்த வெள்ளத்தில் அங்கேயே உயிரிழந்தார் பிரவிஸ்.
பொதுமக்கள் கண்முன்னாடியே காலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.. இதை பார்த்து அலறிய மக்கள் உடனடியாக போலீசுக்கு தகவல் சொன்னார்கள்.. போலீசார் விரைந்து வந்து பிரவிஸ் உடலை மீட்டு போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தனர்.
Recommended Video
எதிரே வந்த வாகனம் என்ன, டிரைவர் யார், விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்த விசாரணை நடக்கிறது. டியூட்டிக்கு சென்று கொண்டிருந்த போலீஸ்காரர் கரண்ட் கம்பத்தில் மோதி தலைசிதறி இறந்தது சக காவலர்களிடையே அதிர்ச்சியை தந்துள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications