Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெரம்பலூரில் கலெக்டருக்கே சர்ப்ரைஸ்.. திகைத்து நின்ற அரசு பள்ளி.. யாரிந்த சென்னை தொழிலதிபர்? தங்கமான மனசு

Subscribe to Oneindia Tamil

பெரம்பலூர்: பெரம்பலூர் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் முதல் பொதுமக்கள் வரை, அருள்மணி என்பவரை பாராட்டி கொண்டிருக்கிறார்கள்.. இதனால், அருள்மணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. என்ன நடந்தது பெரம்பலூரில்? யாரிந்த அருள்மணி?

ஏழை மாணவர்கள் கல்வி கற்க எத்தனையோ வசதிகளை, நம்முடைய அரசு செய்து தருகிறது. இதனால், அனைவராலும் கல்வி கற்க முடிகிறது. ஆனால், 30, 40 வருடங்களுக்கு முன்பு ஏழ்மை காரணமாக எத்தனையோ பேர் கல்வி கற்க முடியாமல் இருந்தனர்.

Perambalur Collector Government School

குடும்ப சூழல், வறுமை

வறுமை, குடும்பச்சூழல், விழிப்புணர்வின்மை, அருகிலேயே பள்ளிகள் இல்லாமை போன்ற காரணங்களால், 8-ம் வகுப்பையே நிறைய பேரால் தாண்ட முடியவில்லை. எனினும், பல்வேறு சங்கடங்களுக்கிடையே படித்து முடித்தவர்கள், பல இடங்களில் இன்று அதிகாரிகளாக பதவி வகித்து வருகிறார்கள்.

இதில் சில பேர் தாங்கள் படித்த பள்ளிக்கு, தங்களால் ஆன உதவிகளையும் செய்து வருகிறார்கள். அந்தவகையில், 3 வருடங்களுக்கு முன்பு, விழுப்புரம் அருகே முன்னாள் மாணவர் ஒருவர், தான் படித்த கிராமப் பள்ளிக்கு ரூ.1.5 கோடி நிதியுதவி செய்திருந்தது, தமிழக மக்களின் கவனத்தை ஈர்த்திருந்தது. கக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பெஞ்சமின் என்பவர், அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் அரசு ஊழியராகப் பணியாற்றி வருகிறார்.

சபாஷ் பெஞ்சமின்

தன்னுடைய கிராமத்துக்கும் தான் படித்த பள்ளிக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில், நண்பர்களுடன் இணைந்து அரசு உதவி பெறும் பள்ளிக்கு நவீன வசதிகளுடன் 8 வகுப்பறைகளைக் கட்டிக் கொடுத்ததுடன் உட்கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்தித் தந்துள்ளார். மேலும், கடந்த 20 வருடங்களாகவே விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும், பழங்குடியினப் பள்ளிகளுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார்.

இதுபோலவே, பெரம்பலுார் மாவட்டத்திலும் ஒரு நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.. லாடபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அருள்மணி என்பவருக்கு இப்போது 61 வயதாகிறது.. இவர் சென்னை அசோக்நகரில் குடும்பத்துடன் வசித்து வரும் அருள்மணி, "வெரிடாஸ் பவுண்டேஷன்" என்ற நிதி நிறுவனத்தை சொந்தமாக நடத்தி வருகிறார்.

வெறும் 166 மாணவர்கள்

சில மாதங்களுக்கு முன்பு உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க சொந்த கிராமத்துக்கு வந்திருந்தபோது, தான் படித்த லாடபுரம் அரசு நடுநிலைப் பள்ளிக்கு நேரில் சென்றார். 1976ம் ஆண்டு 1 முதல் 8ம் வகுப்பு வரை இங்கு படித்திருக்கிறார்.

ஆனால், 1980ல் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டும்கூட, அந்த பள்ளியில் போதிய அடிப்படை வசதிகள் இன்றுவரை இல்லாமல் இருப்பதும், இதனால் வெறும் 166 மாணவ - மாணவிகளே இப்போது அங்கு படித்து வருவதையும் அறிந்து வேதனை அடைந்தார்.

பளபளப்பாக மின்னும் அரசு பள்ளி

எனவே, தன்னுடைய சொந்த செலவில், வெரிடாஸ் பவுண்டேஷன் வாயிலாக, "நம்ம ஸ்கூல் - நம்ம ஊரு'" பள்ளி திட்டத்தின் கீழ், தேவையான அடிப்படை வசதிகளை பள்ளிக்கு செய்து தர முடிவு செய்து, சிதிலமடைந்த பள்ளி மேற்கூரை, சுற்றுச்சுவர், விழா மேடை, கலையரங்கம், குளிர்சாதன ஆய்வகம், கழிப்பறை, சிசிடிவி கேமரா, கண்கவர் கார்டன், விளையாட்டு மைதானம், காய்கறி தோட்டம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை 2.15 கோடி ரூபாய் செலவில் செய்து தந்துள்ளார்.

அருள்மணியின் முயற்சியால், இப்போது அந்த பள்ளி ஜொலிப்பில் மின்னுகிறது.. இந்த கட்டமைப்பு வசதிகளை பெரம்பலூர் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் திறந்து வைத்தார்... அருள்மணி பள்ளியில் செய்து தந்திருந்த வசதிகளை கண்டு, கலெக்டர் முதல் கிராம மக்கள் வரை ஆச்சரியத்துடன் மலைத்து பார்த்தனர்.. அத்துடன் அருள்மணியையும் பாராட்டி கொண்டிருக்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+