புதுவையில் திங்கள் வரை.. 55 மணி நேர முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது.. எவற்றுக்கெல்லாம் அனுமதி தெரியுமா?
புதுச்சேரி: புதுவையில் நேற்று இரவு 10 மணி முதல் 55 மணி நேர முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. வருகிற திங்கள்கிழமை காலை 5 மணி வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும்.
தமிழகத்தை போன்று புதுவையிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அங்கு தினமும் 700-க்கும் மேற்பட்டோர் கொரோனவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கொரோனா பரவலை தடுக்க புதுவையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அங்கு தினமும் இரவு 10 மணி முதல் மறுநாள் காலை 5 மணிவரை இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது.

முழு ஊரடங்கு
இது தவிர மேலும் கட்டுப்பாடுகள் விதிக்கும் வகையில் வெள்ளிக்கிழமைஇரவு 10 மணி முதல் 26-ம் தேதி(திங்கள்கிழமை) காலை 5 மணி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. முதலில் இந்த ஊரடங்கில் எந்த தளர்வும் வழங்கப்படாததால் பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. அத்தியாவசிய பணிகளுக்கு விலக்கு அளிக்கவேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.

திங்கள் காலை 5 மணி வரை
இந்த நிலையில் புதுவையில் நேற்று இரவு 10 மணி முதல் 55 மணி நேர முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. வருகிற திங்கள்கிழமை காலை 5 மணி வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும். ஊரடங்கை மீறி யாரவது செய்லபடுகிறார்களா? என்பதை கண்காணிக்க போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஊரடங்கின்போது எவற்றுக்கெல்லாம் அனுமதி? எவற்றுக்கெல்லாம் தடை? என்பது குறித்து இப்போது காண்போம்.

பஸ்கள் இயங்கும்
* மளிகை, காய்கறி, பழக் கடைகள், பால் அங்காடிகள், இறைச்சி, மீன் விற்பனை கடைகள், மருந்துப்பொருள், மருத்துவ உபகரணங்கள் விற்பனை கடைகள், உணவகங்கள் தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி இயங்கலாம்.
* மருத்துவமனைகள் மருத்துவம் சார்ந்த பணி செய்வதற்கு எந்த தடையும் இல்லை.
* அரசு மற்றும் தனியார் பஸ்கள், ஆட்டோக்கள், டாக்சிகள் இயங்கும். ஆனால் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே இதனை பயன்படுத்த வேண்டும்.
* உணவுகளை வீடுவீடாக சென்று விநியோகிக்கவும், ஓட்டல்களில் இருந்து எடுத்து செல்லவும் தடையில்லை.

திருவிழாக்கள் தடை
* அரசு அலுவலகம் மற்றும் அத்தியாவசிய பணிகளில் ஈடுபடுபவர்கள் அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும். பஸ்களில் பயணங்கள் செல்வோர் அதற்கான டிக்கெட்டுகளை எடுத்து செல்ல வேண்டும்.
* பெட்ரோல் பங்க், வங்கிகள், இன்சூரன்சு அலுவலகங்கள், ஏடிஎம் இயங்கலாம்.
* மத விழாக்கள், திருவிழாக்கள் தடை செய்யப்படுகிறது. ஆனால் கட்டுப்பாடுகளுடன் கோவில்களில் வழிபாடு நடத்தலாம்.












Click it and Unblock the Notifications