மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில்.. வெடித்து சிதறிய பாய்லர்.. பயங்கர தீ விபத்து.. 4 பேர் படுகாயம்!

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: புதுவையில் மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 4 பணியாளர்கள் படுகாயம் அடைந்தனர்.

தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். படுகாயம் அடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

மருந்து தயாரிக்கும் நிறுவனம்

மருந்து தயாரிக்கும் நிறுவனம்

புதுவை மாநிலம் மேட்டுப்பாளையத்தில் தனியாருக்கு சொந்தமான மருந்து தயாரிக்கும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளாமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிறுவனத்தில் இன்று தொழிலாளர்கள் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

பாய்லர் வெடித்து சிதறியது

பாய்லர் வெடித்து சிதறியது

இந்த நிலையில் இன்று மாலை நிறுவனத்தில் இருந்த பாய்லர் ஒன்று திடீரென வெடிதது சிதறியது. பாய்லர் வெடித்து சிதறிய வேகத்தில் அங்கு தீப்பற்றியது. முதலில் சிறிய அளவு பற்றி எரிந்த தீ வேகமாக கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது.

தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்

தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்

அங்கு இருந்த ஊழியர்கள் தீயில் சிக்கிக் கொண்டனர். இது குறித்து உடனடியாக தீயணைப்பு படையினருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

4 பேர் படுகாயம்

4 பேர் படுகாயம்

இந்த தீ விபத்தில் சிக்கி 4 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரையும் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+