பெண் குழந்தைகள் பிறந்தால் ரூ.50,000 டெபாசிட்! புதுச்சேரியில் அமலுக்கு வரும் புதிய திட்டம்!

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: பெண் குழந்தைகள் பிறந்தால் அரசு சார்பில் ரூ.50,000 டெபாசிட் செய்யும் திட்டம் புதுச்சேரியில் விரைவில் அமலுக்கு வரவுள்ளது. இதற்கான பணிகளை அதிகாரிகள் மூலம் விரைவுப்படுத்தி வருகிறார் புதுச்சேரி முதலமைச்சர் ரெங்கசாமி.

பெண் குழந்தைகளை பெற்றெடுக்கும் பெற்றோர் மத்தியில் ரெங்கசாமி கொண்டு வரவுள்ள இந்த திட்டம் மிகுந்த வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற வேண்டும் என்றால் குறைந்தது 5 ஆண்டுகள் புதுச்சேரியில் குடியிருந்திருக்க வேண்டும் என்பது விதிமுறையாகும்.

A scheme to deposit Rs.50,000 on behalf of the government when a girl child is born will soon be implemented in Puducherry.

புதுச்சேரியில் புதுமையை புகுத்த விரும்பிய முதலமைச்சர் ரெங்கசாமி, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000, பெண் குழந்தைகள் பிறந்தால் ஐமபதாயிரம் ரூபாய் வைப்புத் தொகை, கியாஸ் சிலிண்டர் மாணியம் ரூ.300 என மூன்று முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார். அதில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் மட்டும் தொடங்கப்பட்டுள்ளது.

பெண் குழந்தைகளுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் வைப்புத் தொகை செய்யும் திட்டத்துக்கு இப்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த திட்டம் புதுச்சேரியில் மிக விரைவில் அமலுக்கு வரவுள்ளது. முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இந்தப் பணம் வழங்கப்படுகிறது.

கடந்த மார்ச் 17ஆம் தேதிக்கு பிறகு பிறந்த பெண் குழந்தைகள் அனைவருக்கும் இந்த வைப்புத் தொகை வழங்கப்படவுள்ளது. அஞ்சலகம் அல்லது வங்கி என இரண்டில் ஒன்றில் இந்தத் தொகை டெபாசிட் செய்யப்படும். 21 வயதுக்கு பிறகு முதிர்வுத் தொகை கைக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+