போராட்டம் நடத்த வேண்டியதுதான்.. அதுக்காக இப்படி விபரீதமாகவா.. உயிர் போச்சுன்னா என்ன செய்வது
Recommended Video

புதுச்சேரி: புதுச்சேரியில் நடந்த ஒரு நூதன போராட்டத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் தூக்கில் தொங்குவது போல நடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் இந்த பரபரப்பு.
புதுச்சேரியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு புதுச்சேரி - கடலூர் நூறடி சாலையில் ரெயில்வே மேம்பாலம் கட்டப்பட்டது.
ஆனால் மக்கள் வரிப்பணத்தில் புதியதாக கட்டிய மேம்பாலம் சில மாதங்களிலேயே விரிசல் அடைந்து, குண்டும் குழியுமாக மேம்பாலம் காட்சி அளிக்கிறது.

போராட்டம்
ஆம் ஆத்மி கட்சி சார்பில் பலமுறை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும், மேம்பாலத்தை சீரமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட அக்கட்சியினர் முடிவு செய்தனர்.

புதுவை அரசுக்கு கண்டனம்
புதுச்சேரி அரசுக்கு மேம்பாலத்தின் அவல நிலையை தெரிவிக்கும் வகையில், ஆம் ஆத்மி கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் சுந்தராஜன் கட்சி நிர்வாகிகளுடன் மேம்பாலத்திற்கு வருகை தந்தார்.

நூதன போராட்டம்
மேம்பாலத்தின் மீது ஏறிய அவர் அங்கிருந்த மின் கம்பியில் தூக்கு போட்டு தொங்கியபடி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும் அவருடன் வந்த ஆம் ஆத்மி கட்சியினர் புதுச்சேரி அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களையும் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தவிர்க்க வேண்டும்
இந்த போராட்டத்தால் அந்தப் பாதை வழியாக போனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். போராட்டம் நடத்த வேண்டியதுதான். ஆனால் அதற்காக இப்படி விபரீதமாக முயற்சி செய்வது சரியா.. ஒன்று கிடக்க ஒன்று ஆகி விட்டால் என்ன செய்வது.. உயிருடன் விளையாடலாமா என்று பலரும் முனுமுனுத்தனர்.

அரசு நடவடிக்கை தேவை
புதுச்சேரி மேம்பாலம் கட்டி திறக்கப்பட்ட சில மாதங்களிலேயே பாலத்தின் பக்கவாட்டில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் அதன் அருகில் வசிக்கும் மக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது எனவே அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications