பற்ற வைத்த தமிழிசை! பக்கா பிளானோடு புதுச்சேரி வரும் அமித் ஷா! டாப் புள்ளிக்கு கால் கட்டு போட பிளான்?
புதுச்சேரி: இரண்டு நாட்களுக்கு முன் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் டெல்லிக்கு சென்று பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த நிலையில், புதுச்சேரிக்கு வர அமித் ஷா முடிவு செய்துள்ளார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு டெல்லி சென்ற தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை, பிரதமர் மோடியை சந்தித்தார். அதன்பின் உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் சந்தித்தார்.
இந்த சந்திப்பு இரண்டு விவகாரங்களை மையப்படுத்தி இருந்தது. ஒன்று தெலுங்கானா முதல்வர் கே சந்திரசேகர ராவுடன் நிலவும் மோதல். இரண்டாவது புதுச்சேரி அரசியல் நிலவரம்.

என்ன பேசினார்?
இந்த சந்திப்பில், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவை பற்றி புகார் வாசித்துள்ளார் தமிழிசை. தன்னை மதிக்கவில்லை, தனக்கு உண்டான மரியாதையை கொடுக்கவில்லை. அரசு நிகழ்வுகளுக்கு என்னை அழைக்கவில்லை என்றெல்லாம் தமிழிசை புகார் அளித்துள்ளார். நான் சட்டப்படிதான் செயல்படுகிறேன். ஆனால் ஆளுநருக்கு உரிய மரியாதையை அவர்கள் கொடுக்கவில்லை என்று தமிழிசை புகார் அளித்து இருக்கிறார்.

வேறு என்ன புகார்
அதேபோல, புதுச்சேரியின் முதல்வர் ரெங்கசாமி தரப்பிலிருந்தும் எனக்கு ஒத்துழைப்பு இல்லை என்று தமிழிசை புகார் அளித்ததாக தகவல்கள் வந்தன. தலைமைச் செயலாளரிடம் இது பற்றி நான் கேள்வி எழுப்பினால், "பாஜகவின் சீனியர் அமைச்சர் நமச்சிவாயம் தான் எல்லாத்தையும் பார்த்துக்கிறாரே... என அலட்சியமாக சொல்கிறார்கள் ஆளும் கூட்டணியில்" என்று புலம்பியிருக்கிறாராம் தமிழிசை என்கிறது டெல்லி வட்டாரங்கள்.

என்ன புகார்
அதாவது புதுச்சேரியில் சட்டப்படி துணை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரங்கள் உள்ளன. அங்கு துணை ஆளுநராக கிரண் பேடி இருந்த போது அதிகாரத்தோடு பல விஷயங்களை கட்டுப்படுத்தினார். தற்போது அங்கு என் ஆர் காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சி இருக்கிறது. இதனால் துணை ஆளுநர் தமிழிசைக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் தரப்படவில்லை என்று செய்திகள் வருகின்றன. இதை பற்றி அமித் ஷாவிடம் தமிழிசை பேசியதாக கூறப்படுகிறது.

அமித் ஷா
இந்த நிலையில்தான் அமித் ஷா தற்போது புதுச்சேரிக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக அமித் ஷா புதுச்சேரி வருகிறார் என்று அரசு தரப்பு தெரிவித்துள்ளது. ஏப்ரல் 24ம் தேதி அமித் ஷா புதுச்சேரி வரும் நிலையில் அங்கு பல்வேறு கூட்டங்களை நடத்த உள்ளார். பல அரசியல் ரீதியான சந்திப்புகளை அமித் ஷா நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் புதுவையில் இருக்கும் முக்கிய புள்ளி ஒருவருக்கு கால் கட்டு போடும் வகையில் அமித் ஷா இந்த பயணத்தை மேற்கொள்ள போகிறார் என்றும் கூறப்படுகிறது.

புதுச்சேரி
முன்னதாக டெல்லிக்கு தமிழிசை தனியாக போனது விமர்சனத்திற்கு உள்ளானது. பாஜக கூட்டணியில் இருக்கும் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை அழைத்து செல்லாமல் தனியாக துணை நிலை ஆளுநர் தமிழிசை மட்டும் சென்றது விமர்சனத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது. இந்த நிலையில் முதல்வரை அழைக்காமல் தனியாக சென்றதாக எண்ண வேண்டாம். நானும் முதல்வரும் மாநில நலனுக்காக இணைந்துதான் பணியாற்றி வருகிறோம் என்று தமிழிசை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications