முழு அடைப்பு போராட்டம் எதிரொலி.. புதுச்சேரியில் தமிழக பேருந்துகள் மீது கல்வீச்சு

நாடுதழுவிய முழு அடைப்பு போராட்டத்தால் புதுச்சேரியில் தமிழக பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    இன்று நாடுதழுவிய முழு அடைப்பு போராட்டம்- வீடியோ

    டெல்லி: நாடுதழுவிய முழு அடைப்பு போராட்டத்தால் புதுச்சேரியில் தமிழக பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

    இன்று நாடு முழுக்க முழு அடைப்பு போராட்டம் நடக்கிறது. 10க்கும் மேற்பட்ட அமைப்புகள் போராட்டத்தை நடத்துகிறது. இதனால் நாடு முழுக்க மிகவும் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

    All India Bandh: Tamilnadu buses attacked in Puducherry

    ஆனால் போராட்டம் காரணமாக தமிழகத்தில் பெரிய பாதிப்பு எதுவும் இல்லை. தமிழகத்தில் இயல்பு வாழ்க்கை பெரிய அளவில் பாதிப்பிற்கு உள்ளாகவில்லை. பேருந்துகள், நிறுவனங்கள் தமிழகத்தில் எப்போதும் போல் இயங்கி வருகிறது.

    ஆனால் பிற மாநிலங்களுக்கு செல்லும் தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் புதுச்சேரியில் தமிழக பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

    புதுச்சேரியிலிருந்து மயிலாடுதுறை சென்ற தமிழக அரசு பேருந்து மீது மர்ம நபர்கள் கல்வீசி உள்ளனர். கல்வீச்சில் பேருந்தின் கண்ணாடி உடைக்கப்பட்டது.

    கல்வீச்சில் பேருந்தின் கண்ணாடி உடைக்கப்பட்டது. பேருந்தில் இருந்த இரண்டு பேர் இதனால் காயம் அடைந்தனர். இதனால் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் பாதுகாப்பு இல்லை என்று போலீசாரிடம் வாக்குவாதம் செய்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    தற்போது அங்கு போலீசார் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள். புதுச்சேரி செல்லும் தமிழக பேருந்துகள் எல்லையில் நிறுத்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+