"நான் தான் கொரோனா.. என்னை தேடி நீ வெளியே வராதே".. புதுவை சாலைகளில் விழிப்புணர்வு ஓவியம்
புதுச்சேரி: புதுச்சேரியில் சாலையின் நடுவே பிரம்மாண்டமான ஓவியம் வரைந்து கொரோனா வைரஸ் குறித்து நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் வரும் 14 ஆம் தேதி வரை 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே வர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இருப்பினும் தேவையின்றி சிலர் வெளியே நடமாடுகின்றனர்.

ஊரடங்கை மீறி வெளியே வருவோரை சில இடங்களில் போலீஸார், காலில் விழாத குறையாக கெஞ்சி திருப்பி அனுப்புகின்றனர். சில இடங்களில் நூதன தண்டனை அளிப்பது, வழக்குப் பதிவு செய்வது, வாகனங்களை பறிமுதல் செய்வது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மக்களிடம் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, முதலியார்பேட்டை தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் நூதன முயற்சியை மேற்கொண்டுள்ளார். சாலையில் இருசக்கர வாகனங்களில் சுற்றி திரிவோரையும், வீட்டை விட்டு வெளியே வருவோரையும் எச்சரிக்கும் விதமாக முதலியார்பேட்டை காவல் நிலையம் அருகே பச்சை மற்றும் வெள்ளை வண்ணத்தில் 30 அடி நீளம், 40 அடி அகலம் கொண்ட பிரமாண்டமான கொரோனா வைரஸ் படத்தை வரைந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

படத்தின் கீழ் ''நான் தான் கொரோனா", "என்னை தேடி நீ வெளியே வராதே வந்தால் உனக்கு நிச்சயம் மரணம்'' என்ற வாசகத்தையும் எழுதியுள்ளனர். தொடர்ந்து முதலியார்பேட்டை அம்பேத்கர் சாலை, புவன்கரே வீதி, மரப்பாலம் சந்திப்பு, சுதானா நகர், 100 அடி சாலை உள்ளிட்ட இடங்களிலும் இதுபோன்று விழிப்புணர்வு படம் வரையப்பட உள்ளது.

இதேபோல் புதுச்சேரியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவலா்களுக்கு கொரோனா தொற்று பரவுவதைத் தடுப்பது குறித்து மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன. புதுச்சேரியில் கொரோனா வைரஸ் தடுப்புப் பணியில் போலீஸாா் இரவு பகல் பாராமல் பணியாற்றி வருகின்றனா். இதனால், அவா்கள் மன உளைச்சலுக்கும், உடல் நிலை பாதிப்புக்கும் உள்ளாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, சுகாதாரத் துறை சாா்பில் போலீஸாா் தங்களை கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தற்காத்துக் கொண்டு, பணியாற்றுவது குறித்து அவா்கள் பணியாற்றும் இடங்களுக்கே சென்று மன நலம் மற்றும் பொது மருத்துவ ஆலோசனைகளை வழங்கினர்.


-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications