"நான் தான் கொரோனா.. என்னை தேடி நீ வெளியே வராதே".. புதுவை சாலைகளில் விழிப்புணர்வு ஓவியம்
புதுச்சேரி: புதுச்சேரியில் சாலையின் நடுவே பிரம்மாண்டமான ஓவியம் வரைந்து கொரோனா வைரஸ் குறித்து நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் வரும் 14 ஆம் தேதி வரை 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே வர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இருப்பினும் தேவையின்றி சிலர் வெளியே நடமாடுகின்றனர்.

ஊரடங்கை மீறி வெளியே வருவோரை சில இடங்களில் போலீஸார், காலில் விழாத குறையாக கெஞ்சி திருப்பி அனுப்புகின்றனர். சில இடங்களில் நூதன தண்டனை அளிப்பது, வழக்குப் பதிவு செய்வது, வாகனங்களை பறிமுதல் செய்வது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மக்களிடம் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, முதலியார்பேட்டை தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் நூதன முயற்சியை மேற்கொண்டுள்ளார். சாலையில் இருசக்கர வாகனங்களில் சுற்றி திரிவோரையும், வீட்டை விட்டு வெளியே வருவோரையும் எச்சரிக்கும் விதமாக முதலியார்பேட்டை காவல் நிலையம் அருகே பச்சை மற்றும் வெள்ளை வண்ணத்தில் 30 அடி நீளம், 40 அடி அகலம் கொண்ட பிரமாண்டமான கொரோனா வைரஸ் படத்தை வரைந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

படத்தின் கீழ் ''நான் தான் கொரோனா", "என்னை தேடி நீ வெளியே வராதே வந்தால் உனக்கு நிச்சயம் மரணம்'' என்ற வாசகத்தையும் எழுதியுள்ளனர். தொடர்ந்து முதலியார்பேட்டை அம்பேத்கர் சாலை, புவன்கரே வீதி, மரப்பாலம் சந்திப்பு, சுதானா நகர், 100 அடி சாலை உள்ளிட்ட இடங்களிலும் இதுபோன்று விழிப்புணர்வு படம் வரையப்பட உள்ளது.

இதேபோல் புதுச்சேரியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவலா்களுக்கு கொரோனா தொற்று பரவுவதைத் தடுப்பது குறித்து மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன. புதுச்சேரியில் கொரோனா வைரஸ் தடுப்புப் பணியில் போலீஸாா் இரவு பகல் பாராமல் பணியாற்றி வருகின்றனா். இதனால், அவா்கள் மன உளைச்சலுக்கும், உடல் நிலை பாதிப்புக்கும் உள்ளாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, சுகாதாரத் துறை சாா்பில் போலீஸாா் தங்களை கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தற்காத்துக் கொண்டு, பணியாற்றுவது குறித்து அவா்கள் பணியாற்றும் இடங்களுக்கே சென்று மன நலம் மற்றும் பொது மருத்துவ ஆலோசனைகளை வழங்கினர்.


-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications