எதிர் நீச்சல் போட்ட ஆமைக்குஞ்சுகள்.. ஆச்சரியத்துடன் பார்த்த சுற்றுலாப் பயணிகள்!
புதுச்சேரி: புதுச்சேரியில் அரியவகை ஆலிவ் ரெட்லி வகை ஆமைகள் இட்டுச் சென்ற 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முட்டைகளை பாதுகாத்து, முட்டையிலிருந்து வெளிவந்த ஆமை குஞ்சுகளை வன அலுவலர்கள் புதுச்சேரி கடலில் பாதுகாப்பாக விட்டனர்.
Recommended Video

இந்திய ஆழ்கடல் பகுதிகளில் வசிக்கும் ஆலிவ் ரெட்லி எனும் அபூர்வ வகை ஆமைகள் ஆண்டுதோறும் நவம்பர் முதல் மார்ச் மாதம் வரையிலான காலங்களில் கடற்கரை பகுதிக்கு வந்து மணலில் முட்டையிட்டு திரும்பி சென்று விடும். இந்த முட்டைகளில் இருந்து 45 முதல் 50 நாட்களுக்குள் ஆமை குஞ்சுகள் பொறிந்து வெளிவந்து தாமாகவே கடலுக்குள் சென்று விடும்.

ஆனால் பெரும்பாலான ஆமை முட்டைகள் கடற்கரை பறவைகள், விலங்கினங்கள் மற்றும் மனிதர்களால் அழிக்கப்படுகின்றன. மேலும் முட்டையிட கரைக்கு வரும் ஆலிவ் ரெட்லி ஆமைகள், மீன் வலைகளில் சிக்கியும், படகுகளின் துடுப்புகளில் அடிபட்டும் இறந்து கரை ஒதுங்கி வருகின்றன. இதனால் இவ்வகை ஆமைகளின் இனப்பெருக்கம் பாதிக்கப்பட்டு வருகிறது.

அரியவகை ஆமைகளை பாதுகாக்கும் பொருட்டு புதுச்சேரி வனத்துறை மீனவர்களுடன் இணைந்து புதுச்சேரி எல்லைக்குட்பட்ட வீராம்பட்டினம், சின்னவீராம்பட்டினம், நரம்பை, மூர்த்திக்குப்பம் புதுக்குப்பம், பூரணாங்குப்பம் புதுக்குப்பம், நல்லவாடு உள்ளிட்ட கடற்கரை பகுதியில் ஆமை முட்டைகளை சேகரித்து, பொறிப்பகத்தில் பாதுகாப்பாக புதைத்து வைத்து, குஞ்சுகள் பொரித்ததும் அதனைகடலில் விடும் பணியை ஆண்டுதோறும் செய்து வருகிறனர்.

அந்த வகையில் இந்தாண்டு கடந்த நவம்பர் மாதம் முதல் இதுவரை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முட்டைகள் சேகரிக்கப்பட்டு, நரம்பை மற்றும் புதுக்குப்பம் கடற்கரை பகுதியில் பொறிப்பகம் ஏற்படுத்தி மணலுக்குள் புதைத்து வைத்து பாதுகாத்து வருகின்றனர். அதில் நரம்பை கிராமத்தில் உள்ள பொறிப்பகத்தில் இருந்து நேற்று முட்டைகள் பொறிந்து வெளிவந்த 200 க்கும் மேற்பட்ட ஆமை குஞ்சுளை வனத்துறை ஊழியர்கள் சேகரித்து மீனவர்கள் உதவியுடன் நரம்பை கடலில் விட்டனர்.

அப்போது ஆமை குஞ்சுகள் அலையை எதிர்த்து நீந்தி கடலுக்குள் சென்றன. இதனை வன ஆர்வலர்கள் மற்றும் கடற்கரைக்கு வந்த சுற்றுலாபயணிகள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications