வழக்கறிஞர்களுக்கு வக்கீல் தொழில்தான் முதல் மனைவி.. ஹைகோர்ட் நீதிபதி சுப்ரமணியன் பேச்சு
புதுச்சேரி: வழக்கறிஞர்கள், வழக்கறிஞர் தொழிலை முதல் மனைவி போல பார்த்துகொண்டு, 24 மணி நேரமும் வழக்கறிஞர்களாகவே இருக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி சுப்ரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.
புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரியில் முன்னாள் மாணவர் சங்க துவக்க விழா, அந்த கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. துவக்க நிகழ்ச்சியில் மாநில முதலமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு முன்னாள் மாணவர் சங்கத்தை தொடங்கி வைத்தார்.

மேலும் நிகழ்ச்சியில் புதுச்சேரி அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் படித்து முடித்து தற்போது, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகளாக உள்ள சுப்ரமணியம், இளந்திரையன், புகழேந்தி ஆகியோர் கலந்துகொண்டு, தங்களின் பழைய கல்லூரி நினைவுகளை மாணவர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் மத்தியில் வெளிப்படுத்தி மகிழ்ச்சி அடைந்தனர்.

விழாவில் பேசிய மாநில முதலமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரியை, சட்டப் பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்து வருவதாகவும், சென்னை உயர் நீதிமன்றத்தின் கிளையை புதுச்சேரியில் திறக்கக்கோரி மத்திய சட்டத்துறை அமைச்சரை சந்தித்து வலியுறுத்தி உள்ளதாக தெரிவித்தார்.

முதலமைச்சரை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சுப்ரமணியம், முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சியில் நீதிபதியாக கலந்துகொள்வது, மிக்க மகிழ்ச்சி அளிப்பதாகவும், வழக்கறிஞர்கள் வழக்கறிஞர் தொழிலை முதல் மனைவி போல் பார்த்துக்கொண்டு, 24 மணி நேரமும் வழக்கறிஞராக இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications