புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆளுநர் கடிதத்தை நிராகரித்தார் நாராயணசாமி.. இரவிலும் நீளும் தர்ணா.. குவியும் தொண்டர்கள்!

Google Oneindia Tamil News

புதுச்சேரி: தங்களுடைய கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

ஆளுநர் கிரண்பேடி அனுப்பி உள்ள கடிதத்தை ஏற்றுகொள்ள முடியாது என்று தெரிவித்துள்ள நாராயணசாமி, தங்களுடைய கோரிக்கை தொடர்பாக 6-ம் தேதி கடிதம் கொடுத்துள்ளதாக கூறியுள்ளார்.

CM Narayanaswamy Dharna.. Refuses to accept Governors letter

கடந்த 7ஆம் தேதி என்னிடம் கடிதம் அளித்துள்ளீர்கள். இந்த கடிதம் குறித்து பரிசீலிப்பதற்கு போதிய அவகாசம் கூட கொடுக்காமல் தங்களது அமைச்சரவை சகாக்களுடன் ஆளுநர் மாளிகை வெளியே தர்ணாவில் ஈடுபட்டுள்ளது சட்டத்திற்கு புறம்பானது என ஆளுநர் கிரண்பேடி முதல்வர் நாராயணசாமிக்கு கடிதம் எழுதி உள்ளார்.

மேலும், கடிதம் குறித்து நேரிடையாக ஆலோசனை நடத்துவதற்கு வரும் 21 ந்தேதி காலை 10 மணிக்கு வரும்படி முதலமைச்சர் நாராயணசாமிக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த நிலையில், 39 கோரிக்கைகளை நிறைவேறினால் தான் போராட்டம் வாபஸ் என முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளதோடு, ஆளுநர் கிரண்பேடி அனுப்பி உள்ள கடிதத்தை ஏற்றுக் கொள்ள மறுத்துள்ளார்.

English summary
CM Narayanaswamy denial of the Governor's letter, Durna Struggle continues
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X