கொரோனா பரவல் அதிகரிப்பு: புதுச்சேரியில் பொது இடங்களில் முக கவசம் கட்டாயம் அணிய உத்தரவு
புதுச்சேரி: கொரோனா பரவல் அதிகரிப்பால் புதுச்சேரியில் பொது இடங்களில் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனா பரவல் கடுமையாக அதிகரித்து வருகிறது. புதுச்சேரியிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே இருக்கிறது. புதுச்சேரியில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 36 ஆக பதிவாகி இருந்தது. புதுச்சேரியை விட காரைக்காலில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கிறது.
இந்த நிலையில் புதுச்சேரியில் பொது இடங்களில் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வல்லவன் கூறியதாவது: கொரோனாவைரஸ் கேஸ்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. ஆகையால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் அமல்படுத்தப்படுகின்றன.
புதுச்சேரி யூனியன் பிரதேசம் முழுவதும் கொரோனா பரிசோதனைகள், பின் தொடர்தல், தடுப்பூசி போடுதல் ஆகியவற்றை மேற்கொள்ள மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக முக கவசம் அணிவது மேற்கொள்ளப்படுகிறது.
மேலும் பொது இடங்களில் கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும். கைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications