புதுச்சேரியில் அதிரடி ட்விஸ்ட்.. துணை நிலை ஆளுநர் பொறுப்பில் இருந்து கிரண்பேடி அதிரடியாக நீக்கம்!
புதுச்சேரி: புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பொறுப்பில் இருந்து கிரண் பேடி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
Recommended Video

யூனியன் பிரதேசமான புதுச்சேரியில், முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சி செய்து வருகிறது. தமிழகத்தை போலவே புதுச்சேரியிலும் இன்னும் இரண்டு மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற போகிறது.
இந்த சூழலில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடிக்கும், முதல்வர் நாராயணசாமிக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது. ஆளுநருக்கு எதிராக நாராயணசாமி போர்க்கொடி உயர்த்தி வருகிறார்.

நாராயணசாமிக்கு சிக்கல்
இன்னொரு பக்கம் அமைச்சர் நமச்சிவாயம் உள்பட காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து நாராயணசாமிக்கு எதிராக திரும்பி வருவதால், காங்கிரஸ் ஆட்சி கவிழும் அபாயம் நிலவுகிறது. புதுச்சேரியில் தற்போது குழப்பமான நிலை காணப்படுகிறது.

தமிழிசைக்கு கூடுதல் பொறுப்பு
இந்த சூழலில் திடீர் திருப்பமாக புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பொறுப்பில் இருந்து கிரண் பேடி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. என்ன காரணத்திற்காக நீக்கப்ட்டார் என்பது குறித்து தகவல் இல்லை.

2021ல் நீக்கம்
கிரண்பேடி கடந்த 2016ம் ஆண்டு முதல் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் துணை நிலை ஆளுநராக பொறுப்பு வகித்து வந்தார். பதவிக்கு வந்து ஐந்து ஆண்டுகள் நெருங்கிய நிலையில் இப்போது நீக்கப்பட்டுள்ளார். அதிகாரம் யாருககு அதிகம் என்பதில் நாராயணசாமிக்கும், கிரண்பேடிக்கும் ஆரம்பம் முதலே மோதல் இருந்து வந்தது..

இப்போது நிறைவேற்றம்
பலமுறை நாராயணசாமி கிரண்பேடியை நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்தார். நாராயணசாமியின் கோரிக்கை அவரது ஆட்சி முடியு போகும் நிலையில் தான் நிறைவேறி உள்ளது. புதிய துணை நிலை ஆளுநர் புதுச்சேரிக்கு விரைவில் அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications