புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

புதுச்சேரியில் 24 ஆம் தேதிதான் தேர்தல் முடிவு வெளியாகும்.. தேர்தல் அதிகாரி தகவல்!

Google Oneindia Tamil News

புதுச்சேரி: புதுச்சேரியில் 24ஆம் தேதிதான் தேர்தல் முடிவு வெளியாகும் என அம்மாநில தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் மற்றும் தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கான பயிற்சி முகாம் புதுச்சேரி வழுதாவூர் சாலையில் உள்ள மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

Election result will be announce in Puducherry on May 24th

மாவட்ட தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான அருண் தலைமையில் இந்த பயிற்சி நடந்தது. இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,
ஒவ்வொரு தொகுதியிலும் 5 வி.வி.பாட் எந்திரங்களில் உள்ள ஒப்புகைச்சீட்டுகளை எண்ண வேண்டும் என தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.

அதன்படி புதுச்சேரி முழுவதும் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலுக்கான தொகுதி என மொத்தம் 155 வி.வி.பாட் எந்திரங்களின் ஒப்புகைச்சீட்டுகள் 23-ந் தேதி எண்ணப்படும்.

உங்களுக்கு ஜெய் ஶ்ரீராம்.. எங்களுக்கு ஜெய் மா காளி.. பாஜக கோஷத்துக்கு மமதா பதிலடி!உங்களுக்கு ஜெய் ஶ்ரீராம்.. எங்களுக்கு ஜெய் மா காளி.. பாஜக கோஷத்துக்கு மமதா பதிலடி!

ஒரு வி.வி.பாட் எந்திரத்தில் உள்ள சீட்டுகளை எண்ணுவதற்கு சுமார் 1½ மணி நேரமாகும். இதனால் சுமார் 25 மணி நேரத்திற்கு பிறகே அதிகாரப்பூர்வ தேர்தல் முடிவை வெளியிட முடியும்.

அதன்படி மறுநாள் 24ஆம் தேதி காலை சுமார் 8 அல்லது 9 மணிக்குத்தான் தேர்தல் முடிவு வெளியாகும். இருப்பினும் தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிவுகள் 23-ந் தேதி மாலையில் அறிவிக்கப்படும். இவ்வாறு புதுச்சேரி தேர்தல் அதிகாரியும் ஆட்சியருமான அருண்குமார் கூறினார்.

English summary
Election result will be announce in Puducherry on May 24th said Puducherry election officer Arun kumar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X