புதுச்சேரியில் கொரோனாவுக்கு முதல் பலி.. மாஹே முதியவர் சிகிச்சை பலனின்றி மரணம்

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 71 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். புதுச்சேரியில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்த முதல் நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த மார்ச் மாதம் டில்லியில் நடைபெற்ற மத வழிபாட்டு மாநாட்டில் பங்கேற்று புதுச்சேரி திரும்பிய அரியாங்குப்பம் சொா்ணா நகரைச் சோ்ந்த இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதேபோல, திருவண்டாா்கோவிலைச் சோ்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

First death for coronavirus in Puducherry

இதைத் தொடா்ந்து, அவா்களுடன் தொடா்பில் இருந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இந்த 4 பேரும் புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்த மேலும் இருவருக்கு நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களும் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

First death for coronavirus in Puducherry

இதேபோல் கேரள மாநிலம் அருகே உள்ள புதுச்சேரியின் மாஹே பிராந்தியத்தில் வெளிநாடு சென்று வந்த மூதாட்டி ஒருவருக்கு கொரோனா உறுதியாகி, அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சில நாள்களில் குணமடைந்து வீடு திரும்பினாா்.

First death for coronavirus in Puducherry

இதையடுத்து, அந்த மூதாட்டி வசித்த பகுதிகளில் உள்ள அனைத்துச் சாலைகளும் முழுமையாக அடைக்கப்பட்டு, அந்தப் பகுதிகளில் உள்ள கடைகளும் மூடப்பட்டன. மக்கள் யாரும் வெளியில் செல்லவும், உள்ளே வரவும் முழுமையாக அனுமதி மறுக்கப்பட்டது. சீல் வைக்கப்பட்ட அந்தப் பகுதிகளில் அத்தியாவசியப் பொருள்களான காய்கறி, மளிகை, பால் உள்ளிட்டவை அங்கேயே சென்று வழங்கப்பட்டு வருகின்றன.

First death for coronavirus in Puducherry

இதனிடையே மாஹே தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 71 வயது முதியவருக்கு அண்மையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. இதையடுத்து அவா், கேரள மாநிலம் கண்ணூர் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை அந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்த முதல் நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

First death for coronavirus in Puducherry

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, அதில் ஒருவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார். மேலும் ஒருவர் இன்று காலை உயிரிழந்துள்ள நிலையில், மற்ற 6 பேருக்கு அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+