காந்தி ஜெயந்தி - புதுச்சேரியில் காந்தி திருவுருவச் சிலைக்கு ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி மரியாதை!
புதுச்சேரி: தேசத் தந்தை மகாத்மா காந்தியடிகளின் 154-வது பிறந்தநாளையொட்டி, புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு, துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

இந்தியாவின் விடுதலைக்காக பாடுபட்ட தேசத் தந்தை மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாள், ஒவ்வொரு ஆண்டும், காந்தி ஜெயந்தியாக கொண்டாடப்பட்டு வருகிறது. தேசிய விடுமுறையாக அறிவிக்கப்பட்டு, ஆண்டுதோறும் இந்த நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில், மகாத்மா காந்தியடிகளின் 154-வது பிறந்தநாள், நாடு முழுவதும் இன்று உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளான இன்று, அனைத்து மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் அரசு சார்பில், அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.
அந்த வகையில், மகாத்மா காந்தியடிகளின் பிறந்தநாளையொட்டி, புதுச்சேரி மாநிலத்தில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள காந்தியடிகளின் திருவுருவச் சிலைக்கு, அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
புதுச்சேரி கடற்கரைச்சாலையில் உள்ள காந்தியடிகளின் திருவுருவச்சிலைக்கு புதுச்சேரி அரசு சார்பில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், துணை சபாநாயகர் ராஜவேலு, அமைச்சர்கள் நமச்ச்சிவாயம், சாய் சரவணன்குமார் உள்ளிடோர், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதனை தொடர்ந்து காந்தியடிகளின் திருவுருவ படத்திற்கும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் சர்வமத பிரார்த்தனைகள் மற்றும் தேசபக்தி பாடல்களும் இசைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் சார்பிலும் மற்றும் பல்வேறு இயங்கங்களைச் சேர்ந்தவர்களும், சுதந்திரப் போராட்ட தியாகிகளும், மகாத்மா காந்தியின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்தும், அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்?












Click it and Unblock the Notifications