ஃபனி புயல் எதிரொலி.. புதுச்சேரியில் பலத்த காற்றுடன் கொட்டித் தீர்த்த கனமழை
புதுச்சேரி: புதுச்சேரியில் நேற்றிரவு பலத்த காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
ஃபனி புயல் நாளை ஒடிசா மாநிலத்தில் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடற்கரை பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும், ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்குமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், புதுச்சேரியில் நேற்று பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட குறைவாகவே இருந்தது. மேலும் மாலை திடீரென்று புதுச்சேரி முழுவதும் இருள் மேகங்கள் சூழ்ந்து, இரவு பலத்த காற்றுடன் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கன மழை பெய்தது. கனசெட்டிகுளம், திருக்கனூர், மதகடிப்பட்டு, மடுகரை, ஏம்பலம், வில்லியனூர், கன்னியக்கோவில் உள்ளிட்ட புதுச்சேரியை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கன மழை பெய்தது.

இதனால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். காற்று வேகமாக வீசியதால் புதுச்சேரியின் பல்வேறு இடங்களில் ஒருசில மணி நேரம் மின்சாரம் தடைபட்டது.












Click it and Unblock the Notifications