ரங்கசாமியையே தோற்கடித்த சுயேச்சை வேட்பாளர்.. புதுவை தேர்தல் 2021-ல் வெற்றிகளை குவித்த சுயேச்சைகள்
புதுவை: தமிழகத்தில் கடந்த 2021 சட்டசபை தேர்தலில் சுயேச்சை வேட்பாளர்கள் யாரும் வெற்றி பெறவில்லை. அதே சமயம் புதுவையில் கடந்த சட்டசபை தேர்தலில் முதல்வர் ரங்கசாமியையே தோல்வியடைய செய்யும் அளவுக்கு சுயேச்சை வேட்பாளர்கள் கவனம் ஈர்த்துள்ளனர். மொத்தம் உள்ள 30 சட்டசபை தொகுதிகளில் புதுவையில் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு வென்றவர்களின் விவரங்களை இங்கே பார்க்கலாம்.
புதுவையில் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும் அதே நாளில் அதாவது மே 04 ஆம் தேதி எண்ணப்படுகின்றன. புதுவையை பொறுத்தவரை யூனியன் பிரதேசமாகும். சட்டமன்றத்துடன் கூடிய யூனியன் பிரதேசமாக புதுவை உள்ளது.

புதுவை சட்டமன்ற தேர்தல்
புதுவையில் தற்போது என்.ஆர் ரங்கசாமி முதல்வராக உள்ளார். பாஜக கூட்டணி பலத்துடன் அவர் முதல்வராக உள்ளார். தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ஆளும் என்.ஆர். காங்கிரஸ் கட்சி இடம்பெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் எதிர்க்கட்சி வரிசையில் உள்ள திமுக - காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு இன்னும் முடிவடையவில்லை.
இதனால் அரசியல் களம் அனல் பறந்து கொண்டு இருக்கிறது. புதுவையை பொறுத்தவரை அங்கு மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கையே 9.44 லட்சம் தான். பரப்பளவிலும் சிறியது. மொத்தமே 30 தொகுதிகள்தான் உள்ளன. புதுவையில் இதுவரை நடந்த தேர்தல்களில் சுயேச்சையாக போட்டியிட்டவர்களும் கணிசமான வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
கவனம் ஈர்த்த சுயேச்சை வேட்பாளர்கள்
அந்த வகையில், கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு வென்றவர்களின் விவரங்களை இங்கே பார்க்கலாம். குறிப்பாக முதல்வர் ரங்கசாமி போட்டியிட்ட யானம் தொகுதியில் அவரை சுயேச்சையாக போட்டியிட்ட கோலப்பள்ளி சீனிவாச அசோக் வீழ்த்தி கவனம் பெற்றார்.
சுயேச்சையாக போட்டியிட்டாலும் இவருக்கு காங்கிரஸ், திமுக இடம் பெற்றுள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆதரவு கொடுத்தது. இந்த தொகுதியில் தோல்வியை சந்தித்தாலும் தட்டாஞ்சாவடி தொகுதியில் ரங்கசாமி வெற்றி பெற்றார்.
புதுவையில் வென்ற சுயேச்சைகள் மற்றும் அவர்கள் பெற்ற வாக்கு விவரம்:
* திருபுவணை தொகுதியில் பி.அங்கலனி என்ற வேட்பாளர் சுயேச்சையாக போட்டியிட்டு 10,597 வாக்குகள் பெற்று என்.ஆர் காங்கிரஸ் கட்சி வேட்பாளரை வீழ்த்தினார். எதிர்த்து போட்டியிட்ட என்.ஆர் காங்கிரஸ் வேட்பாளர் கோபிகா 8,238 வாக்குகள் பெற்றார்.
* உழவர் கரை: சுயேச்சையாக போட்டியிட்ட எம்.சிவங்கசர் 11,940 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் ஜி.பன்னீர் செல்வம் -11,121 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.
திமுக இரண்டாம் இடம்
* முத்தியால் பேட்டை: ஜே பிரகாஷ்குமார் சுயேச்சையாக போட்டியிட்டு 8788 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக இரண்டாம் இடம் பிடித்தது. அதிமுக சார்பில் வையாபுரி மணிகண்டன் 7,844 வாக்குகள் பெற்று தோல்வியை சந்தித்து இருந்தார்.
* உருளையன் பேட்டை: ஜி நேரு குப்புசாமி சுயேச்சையாக போட்டியிட்டு 9,580 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக சார்பாக போட்டியிட்ட எச்.கோபால் - 7,487- வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பெற்றார்.
காரைக்கால் மாவட்டம்
திருநள்ளாறு தொகுதியில் பி.ஆர் சிவா சுயேச்சையாக போட்டியிட்டு 9,551 - வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். எச்.ராஜசேகரன் (பாஜக) 8416 வாக்குகள் (இரண்டாம் இடம்) பெற்று தோல்வி அடைந்தார்.
யானம் தொகுதி: கோலப்பள்ளி சீனிவாச அசோக், சுயேச்சையாக போட்டியிட்டு (ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆதரவு) 17,131 வாக்குகள் பெற்று வெற்றியடைந்தார். ரங்கசாமி (என்.ஆர் காங்கிரஸ்) 16475 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.
-
ஈரான் போர் முடிந்ததும்.. இந்தியாவுக்கு அடுத்த பிரச்சனை Monsoon.. மக்களே உஷார்! -
"ஜெயலலிதாவால் ஜெயிலில் அடைக்கப்பட்டவரிடம் கட்சியை விற்றுவிட்டார் எடப்பாடி”.. கு.ப.கிருஷ்ணன் தாக்கு! -
பொற்கொடியால் திருமாவளவனுக்கு அரசியல் சிக்கல்? திமுக கண்ட் அண்ட் ரைட் வார்னிங்? அப்ப அந்த 8 தொகுதி -
மண்டியிட்டதா அமெரிக்கா? ஈரான் மீதான எல்லாம் தடைகளும் நீங்குகிறது? டிரம்பிற்கு இது பெரும் சறுக்கல்? -
ஈரானின் 10 கண்டிஷன்.. தடைகளை நீக்கு... நஷ்டஈடு கொடு.. அமெரிக்காவை அதிரவைத்த ஈரானின் அமைதி டீல் -
சிறகடிக்க ஆசை: விஜயா பற்றி முத்துக்கு தெரிந்த பெரிய உண்மை.. மீனா எடுத்த நல்ல முடிவு! அதிர்ச்சியில் குடும்பம் -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் வெற்றி பெறும் துலாம் ராசி.. வேலை விஷயத்தில் கவனம் -
சீனாவிடம் இருந்து போன மெசேஜ்.. உடனே முடிவை மாற்றிய ஈரான்.. வளைகுடா போர் முடிவுக்கு வந்தது எப்படி? -
திமுகவுக்கு திரும்பிய தென்னாற்காடு ‘தலை’.. 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வந்த செஞ்சி ராமச்சந்திரன்! -
பும்ரா பந்தில் சிக்ஸ் அடித்த பின்.. வைபவ் சூர்யவன்ஷியிடம் என்ன பேசினீர்கள்? ஜெய்ஸ்வால் ஓபன் டாக்! -
கோட்டையை ‘குறி’ வைக்கும் எடப்பாடி.. முக்கிய IAS, IPS அதிகாரிகளை வளைக்க திட்டம்? என்ன நடக்கிறது? -
ஸ்டாலின் காதுக்கு போன 1 பெயர்.. அதிமுகவிலும் தெரிஞ்சுடுச்சு! உளவுத்துறை ரிப்போர்ட் என்ன சொல்லுச்சு












Click it and Unblock the Notifications