கனமழை எதிரொலி! நாகப்பட்டினத்தில் பள்ளிகளுக்கும், காரைக்காலில் பள்ளி கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை!
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: கடந்த சில நாட்களாக தமிழகம், புதுச்சேரியில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்றிரவு தொடங்கி இன்று அதிகாலை வரை காரைக்கால், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. எனவே காரைக்காலில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல நாகப்பட்டினம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இன்று ஒரு நாள் கரைக்காலில் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாக, புதுச்சேரி கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார். நாகையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருக்கிறார்.













Click it and Unblock the Notifications