ஹெல்மெட் போட்டா பூ வாடிடும்.. இது நாராயணசாமி!! பைன் போடுவேன்.. இது கிரண்பேடி.. புதுச்சேரி கலகல!!
Recommended Video

புதுச்சேரி:தலையில் வைத்துள்ள பூ வாடிவிடும் என்பதால் பெண்கள் ஹெல் மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் செல்வதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கட்டாய ஹெல்மெட் சட்ட ம் அமுல்படுத்தப்பட்டது. இருசக்கர வாகன ஓட்டிகள் இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததால், இச்சட்டத்தை நடைமுறைப் படுத்துவதை மாநில அரசு கைவிட்டது.
ஆனால் ஆளுநர் கிரண்பேடி கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்த வேண்டுமென்பதில் உறுதியாக உள்ளார். ஹெல்மெட் விவகாரத்தில் ஆளுநர் கிரண்பேடிக்கும், முதலமைச்சர் நாராயணசாமிக்கு அடிக்கடி வார்த்தைபோர் முற்றி வருகிறது.

சாலை பாதுகாப்பு
இந் நிலையில் சாலை பாதுகாப்பு வார விழா போக்குவரத்து துறை அலுவலகத்தில் முதல்வர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்றது. அப்போது நாராயணசாமி பேசியதாவது: அனைத்து மாநில நகரப்பகுதிகளிலும் வாகன போக்குவரத்து அதிகரித்து, போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

பூ வாடிவிடக்கூடாது
இந்த பிரச்னைக்கு மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால்தான் சரி செய்ய முடியும். இருசக்கர வாகனத்தில் செல்லும் தாய்மார்கள் தலையில் வைக்கும் பூ வாடி விடக்கூடாது என்பதற்காக ஹெல்மெட் அணியாமல் செல்கின்றனர்.

எதுவும் செய்யமுடியாது
புதுச்சேரி மாநிலத்தில் சட்டத்தினை வைத்து எதுவும் செய்ய முடியாது. விழிப்புணர்வு ஏற்படுத்த புதுச்சேரி மக்களுக்கு அன்பாக சொன்னால் ஏற்று கொள்வார்கள். சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும், பாதுகாப்பு வசதிகளுக்காகவும் 3 கோடி செலவு செய்யப்படும். மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி தர்ணிவில் ஈடுபட்டுள்ளது சரியான ஒன்று. லோக்சபா தேர்தலை மனதில் கொண்டு எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களை சிபிஐயை கையில் வைத்துகொண்டு மோடி பழிவாங்கும் நோக்கில் ஈடுபடுகிறார்.

ஜனநாயகம் கிடையாது
சிபிஐ அமைப்பிடமே ஊழல் இருந்ததாக குற்றச்சாட்டு கூறப்பட்டு வந்துள்ளது. அந்த அமைப்பினை வைத்து மிரட்டுவது ஜனநாயகம் அல்ல. 2019ம் ஆண்டு லோக் சபா தேர்தலில் இவை அனைத்தும் மாறும் என்று பேசினார்.

பதிலடி தந்த கிரண்பேடி
மத்திய அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை அவர் பேசிய நிலையில் ஆளுநர் கிரண்பேடி அதற்கு பதிலடி கொடுத்துள்ளார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றிற்கு பின் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:புதுச்சேரி மிகவும் தூய்மையாகவும், அமைதியான நகரமாக இருப்பதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் புதுச்சேரிக்கு வந்து செல்கின்றனர்.

சாலை விபத்துகளால் பலி
ஆனால் புதுச்சேரியில் பெரும்பாலானோர் ஹெல்மெட் அணிந்து செல்லாததால் அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும்.

விரைவில் சட்டம்
அந்த சட்டம் இருந்தும், அதை யாரும் பின்பற்றுவதில்லை. புதுச்சேரி மாநிலத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டுமென்ற சட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும். ஹெல்மெட் அணிந்து செல்லாதவர்களிடம் போக்குவரத்து போலீசார் அபராதம் விதிப்பார்கள் என்றார்.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications