50 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த மைனா குஞ்சுகள்... பனைமரம் ஏறி கூட்டில் வைத்த இளைஞர்
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் காற்றின் வேகத்தால் நிலை தடுமாறி கீழே விழுந்த மைனா குஞ்சுகளை பனைமரம் ஏறி அதன் கூட்டில் சேர்த்துள்ளார் இளைஞர் ஒருவர்.
மனிதநேயமிக்க இந்த செயல் காரணமாக இளைஞர் ஆனந்துக்கு பாராட்டுக்களும், நன்றிகளும் குவிந்த வண்ணம் உள்ளன.
இதனிடையே இளைஞர் ஆனந்தின் உயிர்நேயம் தன்னை சிலிர்க்க வைத்துள்ளதாக கூறியிருக்கிறார் கத்துக்குட்டி திரைப்படத்தின் இயக்குநரும், பத்திரிகையாளருமான சரவணன்.

புதுக்கோட்டை மாவட்டம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒசுவப்பட்டி என்ற கிராமத்தில் நிகழ்ந்த மனிதநேயமிக்க செயல் சமூக வலைதளங்களில் பெரியளவில் பாராட்டையும், வாழ்த்தையும் பெற்றுள்ளது. வயல்வெளி ஓரம் இருந்த பனைமரத்தில் இருந்து காற்றின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் மைனா குஞ்சுகள் கீழே விழுந்தன. சுமார் 50 அடி உயரத்தில் இருந்து விழுந்த மைனா குஞ்சுகள் சிறகு முளைக்காத நிலையில் தரையில் தத்தளித்துக் கொண்டிருந்தன.

உயிர்கள் மீது பாசம்
அப்போது அவ்வழியாக வந்த இளம் விவசாயி ஆனந்த், மைனா குஞ்சுகளை மீண்டும் அதன் கூட்டில் சேர்க்க விரும்பினார். இதையடுத்து கீழே விழுந்த மைனா குஞ்சுகளை எடுத்து தன் சட்டைக்குள் வைத்து பனைமரத்தின் மீது ஏறி அதன் கூட்டில் பாதுகாப்பாக வைத்தார். உயிர்கள் மீது பாசம் கொண்டு ஆனந்த் செய்த இந்த செயலுக்காக அவரை பலரும் சமூக வலைதளங்கள் மூலம் பாராட்டி வருகின்றனர்.

முன்னுதாரணம்
ஆனந்த் நினைத்திருந்தால் மைனா குஞ்சுகளை கண்டு கொள்ளாமல் கூட சென்றிருக்கலாம். ஆனால், அவ்வாறு செய்யாமல் தனது பாதுகாப்பை கூட கருத்தில் கொள்ளாமல் சிறகு முளைக்காத அந்த இளம் பறவைகளை மீண்டு அதன் கூட்டில் சேர்த்திருக்கிறார். ஒவ்வொருவரும் சாலைகளில் செல்லும் போது இது போன்ற நம்மால் முடிந்த உதவிகளை பிறருக்கு செய்தால் அது மனித குலத்தில் பிறந்ததற்கான பயனாக அமையக்கூடும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்காது.

சிலிர்க்க வைத்தது
ஓசுவப்பட்டி கிராமத்தை சேர்ந்த இளம் விவசாயி ஆனந்தின் உயிர்நேயம் தன்னை சிலிர்க்க வைத்ததாகவும், அந்த தம்பிக்கு தனது வாழ்த்தை தெரிவித்துக்கொள்வதாகவும் கூறியுள்ளார் கத்துக்குட்டி திரைப்படத்தின் இயக்குநரும், பத்திரிகையாளருமான சரவணன்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications