கிரண் பேடி கொட்டத்தை அடக்க வந்த தீர்ப்பு.. வென்றது ஜனநாயகம்.. நாராயணசாமி செம ஜாலி!
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு தான் அதிகாரம் உள்ளது என உயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கியுள்ள தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு என்றும், இதன் மூலம் ஜனநாயகம் வென்றுள்ளதாக முதலமைச்சர் நாரயணசாமி கருத்து தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கும், முதலமைச்சர் நாராயணசாமிக்கும் இடையே தொடர்ந்து அதிகார மோதல் இருந்து வருகிறது.
இதன் உச்சகட்டமாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மக்கள் நல திட்டங்களை தடுத்து வருவதாக கூறி, முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் ஆளுநர் மாளிகை முன்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

லட்சுமி நாராயணன் வழக்கு
இந்நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு முதலமைச்சரின் பாராளுமன்ற செயலாளராக உள்ள லஷ்மிநாராயணன் எம்எல்ஏ, துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிடக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

தனிப்பட்ட அதிகாரம் இல்லை
அந்த தீர்ப்பில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குதான் அதிகாரம் உள்ளது என்றும், துணைநிலை ஆளுநருக்கு தனிப்பட்ட அதிகாரம் கிடையாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு துணைநிலை ஆளுநர் ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதுமட்டுமல்லாமல் மத்திய உள்துறை அமைச்சகம் கிரண்பேடிக்கு வழங்கிய அதிகாரத்தையும் ரத்து செய்து உத்தரவு உயர்நீதிமன்ற கிளை பிறப்பித்துள்ளது.

நாராயணசாமி மகிழ்ச்சி
உயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கியுள்ள இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள முதலமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரி மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குதான் அதிகாரம் உள்ளது என உயர் நீதிமன்ற மதுரை கிளை வழங்கியுள்ள தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு.

கொட்டத்தை அடக்க வந்த தீர்ப்பு
இதன் மூலம் ஜனநாயகம் வென்றுள்ளதாகவும், இது புதுச்சேரி மக்களுக்கு கிடைத்த வெற்றி என தெரிவித்தார். இந்த தீர்ப்பு புதுச்சேரி மக்களின் வளர்ச்சிக்கு ஏதுவாக இருக்கும் என்றார். மேலும் பேசிய அவர், இந்த தீர்ப்பு துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் கொட்டத்தை அடக்குவதற்கான தீர்ப்பு என்றார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications