Peak Hours முடிந்த பிறகுதான் விஜய் புதுவைக்கு வர அனுமதி! தளபதின்னு கத்திகிட்டு முண்டியடிக்க முடியாது
புதுச்சேரி: குழந்தைகள் பள்ளிக்குச் சென்ற பிறகுதான் விஜய் புதுவைக்குள் வர அனுமதி அளிக்கப்படும் என காவல் துறை திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. கரூர் சம்பவத்திற்கு பிறகு புதுவையில் பொதுக் கூட்டம் நடத்துகிறார் விஜய்.
கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று பொதுக் கூட்டம் நடத்துகிறார். முதலில் ரோடு ஷோ நடத்த அனுமதி கேட்ட நிலையில் அதற்கு அந்த மாநில அரசு மறுக்கவே, பொதுக் கூட்டம் நடத்தப்படுகிறது.

புதுவை உப்பளம் துறைமுகம் மைதானத்தில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. விஜயின் பிரச்சார வேன் நேற்று இரவே வந்துவிட்டது. இந்த நிகழ்வு 10.30 மணி முதல் 12 மணிக்குள் நடத்திக் கொள்ள போலீஸார் அனுமதி கொடுத்துள்ளது.
பொதுக் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு விஜய்க்கு தனி வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவர் நிர்வாகிகள் வரும் வழியில் வந்தால் கூட்ட நெரிசல் ஏற்படும் என்பதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மைதானம் 20 ஏக்கர் கொண்டது. இதில் ஒரு பகுதியை மட்டுமே பயன்படுத்திக் கொள்ள அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
மைதானத்தில் கட்சியினர் நிற்க பெட்டி பெட்டியாக இரும்பு தடுப்புகள் போடப்பட்டுள்ளது. அதில் ஒவ்வொரு பெட்டியிலும் 3 முதல் 4 போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர். கூட்டம் அதிகரிக்க அதிகரிக்க கூடுதலாக போலீஸார் பணியமர்த்தப்படுவர்.
இவர்களது பணி அந்த பெட்டியை விட்டு தொண்டர்கள் வெளியே வராமல் பார்த்துக் கொள்வதுதான். ஏனென்றால் விஜய்யின் பிரச்சார வாகனத்தை நோக்கி செல்ல தொண்டர்கள் முயற்சிப்பார்கள். இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொதுவாக விஜய் கூட்டங்களுக்கு கட்சியினர் அதிகாலையிலேயே வந்து கூடிவிடுவார்கள். ஆனால் இந்த முறை அப்படி கூடிவிடக் கூடாது என்பதற்காக 9 மணிக்கு மேல் பார்வையாளர்களை அனுமதிக்கிறார்கள். அதிகாலையிலேயே வந்துவிட்டால் தண்ணீர் பற்றாகுறை, வெயில் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த ஏற்பாட்டை போலீஸார் செய்துள்ளனர்.

கியூஆர் கோடுடன் கூடிய அட்டை இருந்தால் மட்டுமே அனுமதி. இது 5 ஆயிரம் பேருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அட்டையை போலீஸார் ஸ்கேன் செய்து அனுப்புகிறார்கள். போலி அட்டைகளை கொண்டு வருவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் விஜய் சாலை மார்க்கமாக வருகிறார். அவர் அவ்வாறு வரும் போது கூட்ட நெரிசல் ஏற்படக் கூடாது என்பதால் கல்லூரிக்குச் மாணவர்கள் சென்ற பிறகும், அது போல் அலுவலகத்திற்கு மக்கள் சென்ற பிறகும்தான் விஜய் நகருக்குள் வர அனுமதி அளிக்கப்படும்.
புதுவை- கடலூர் வழியாக வரும் விஜய், மரப்பாலம் அருகே திரும்பி இந்த உப்பளம் மைதானத்திற்கு வருவதற்கான வழி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அது போல் விஜய்யை பார்க்க அதிகம் கூட்டம் கூடும் என்பதால் புதுவையில் இன்று ஒரு நாள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
நடிகர் அரசியல்வாதியாக கூடாதா? அதுவும், ஓம் சக்தி... பராசக்தி டயலாக்.. வில்லங்க கேள்விக்கு MS பாஸ்கர் பதிலடி -
வேட்புமனுவை கரெக்டா நிரப்பி கொடுங்க.. தவெக வேட்பாளரை திருப்பி அனுப்பிய தேர்தல் அதிகாரி! -
வேட்பு மனு தாக்கலின்போதே திமுக தவெக கட்சியினர் மோதல்.. ராமநாதபுரத்தில் பரபரப்பு! -
தவெக கட்சியினருக்கு ஷாக்! கரூர் வழக்கில் கைதாகி ஜாமீனில் இருந்த மாசி பவுன்ராஜ் அதிமுகவில் இணைந்தார்! -
பெரம்பூரில் மூடிக் கிடக்கும் விஜய் தேர்தல் அலுவலகம்.. இவ்வளவுதான் தவெக தேர்தல் ஏற்பாடு! -
திருச்சியில் விஜய் பேசிக்கொண்டிருக்கும்போதே சரிந்த பெண்கள்! பரப்புரை கூட்டத்தில் நடத்த சம்பவம்! -
ரஜினிகாந்த் திருந்திவிட்டார்.. விஜய் கட்சியை கலைத்துவிட்டு சென்றால் நல்லது - அமீர் -
Vijay Affidavit: குடும்பத்திற்கே கடன் கொடுத்த ஒருவரை பார்த்ததே இல்லை! விஜய் மீது முத்தரசன் தாக்கு! -
இளைஞர்கள் ஆதரவு.. விஜய்யின் அரசியல் வருகையை எப்படி பார்க்கிறீங்க? ஆ.ராசா சொன்ன கருத்து! -
அரசியல் பிரபலங்களுக்கும் TN 2026 பட கேரக்டர்களுக்கும் இருக்கும் ஒற்றுமை! நீச்சல் குளத்தை கவனிச்சீங்களா? -
ஆதவ் அர்ஜுனா கார் மோதி போலீஸ்காரர் கால் முறிந்தது.. திருச்சி விஜய் பிரச்சாரத்தில் அதிர்ச்சி -
Election history: இந்திரா டூ மோடி.! ‘இரட்டைத் தொகுதிகள்’: யார்? எங்கே? நின்றார்கள்.. வென்றார்கள்?











Click it and Unblock the Notifications