கல்வி கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு.. 22வது நாளாக புதுவையில் மாணவர்கள் போராட்டம்!
புதுச்சேரி: உயர்த்தப்பட்ட கல்வி கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி புதுவை மத்திய பல்கலைக்கழக மாணவர்கள் இன்று 22 வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், பல்கலைக்கழக வளாகத்தில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
புதுச்சேரி காலாப்பட்டில் மத்திய பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு பல்கலைக்கழகத்தின் கல்வி கட்டணம் பன்மடங்கு உயர்த்தப்பட்டது.

இந்நிலையில் உயர்த்தப்பட்ட கல்விக் கட்டணத்தை குறைக்க வேண்டும். பல்கலைக்கழகத்தில் புதுச்சேரி மாணவா்களுக்கு அனைத்துப் பாடப்பிரிவுகளிலும் 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். இலவசப் பேருந்து சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுவை பல்கலைக்கழக மாணவா்கள், பல்கலைக்கழக நிர்வாக அலுவலகத்திற்கு வெளியே 20 நாட்களுக்கு மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் நேற்று பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பல்கலைக்கழகத்திற்கு வந்ததால், போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் அப்புறப்படுத்தப்பட்டு, வெள்ளி விழா ஆண்டு வளாகத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையால் சுமார் 20 மணி நேரத்திற்கும் மேலாக சிறை வைக்கப்பட்டனர்.

தொடர்ந்து பட்டமளிப்பு விழா முடிவடைந்து, வெங்கையா நாயுடு பல்கலைக்கழகத்தைவிட்டு சென்றதும், மாணவர்கள் விடுவிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து வெள்ளி விழா ஆண்டு வளாகத்தில் இருந்து ஊர்வலமாக சென்ற மாணவர்கள், மீண்டும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பல்கலைக்கழக நிர்வாக அலுவலகத்தில் தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர்.
மாணவர்களின் போராட்டம் இன்று 22 வது நாளாக தொடர்ந்து வருகிறது. மேலும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத்சிங் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை. இதனையடுத்து நாளை மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. மாணவர்களின் தொடர் போராட்டம் காரணமாக பல்கலைக்கழக வளாகத்தில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications